Header Ads



குளவிக் கொட்டுக்கு இலக்கானவர் வபாத்


யாழ்.நயினாதீவில் குளவிக் கொட்டுக்கு இலக்கான இளம் குடும்ப பெண் ஒருவர் வைத்தியசாலை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். 

 

நயினாதீவு 8ம் வட்டாரத்தில் வசிக்கும் இரு பிள்ளைகளின் தாயாரான முகமது றிலா சபானா என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.

 

நேற்று (15) மாலை வேளை குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.


No comments

Powered by Blogger.