Header Ads



மத்ரஸா விரிவுரையாளர்கள் கைது, விடுதலையை வலியுறுத்தி மைத்­திரி குண­ரத்ன நீதிமன்றில் முன்வைத்த வாதம்


 (எம்.எப்.அய்னா)


உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லுக்கு முன்னர் புத்­தளம் பகு­தியில் இயங்கி வந்த புத்­தளம் அல் சுஹை­ரியா மத­ரஸா பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு வன்­மு­றை­களை தூண்டும் வகையில் விரி­வு­ரை­களை நடத்தி வந்­த­தாக கூறி  இரண்டு விரி­வு­ரை­யா­ளர்கள்  உட்­பட நால்­வரை சி.ஐ.டி.யினர் கைது செய்­துள்­ளனர். சட்ட மா அதிபர் திணைக்­க­ளத்தின் பிரதி சொலி சிட்டர் ஜெனரால் ஹரிப்­பி­ரியா ஜய­சுந்­தர அளித்த ஆலோ­ச­னைக்கு அமைய அவர்­களைக் கைது செய்­த­தாக சி.ஐ.டி.யினர் தெரி­வித்­தனர்.


சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லாஹ்­வுக்கு எதி­ரான வழக்கில், அல் சுஹை­ரியா மத்­ரசா பாட­சாலை மாண­வர்­களின் சாட்­சி­யங்­களே பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன. இந்­நி­லையில், இரு மாண­வர்கள் அவ்­வ­ழக்கு தொடர்பில் சாட்­சியம் அளித்­துள்ள நிலையில், அச்­சாட்­சி­யங்கள் சவா­லுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. அத்­துடன் தம்மை ஹிஜா­ஸுக்கு எதி­ராக சாட்­சி­ய­ம­ளிக்க வற்புறுத்­தி­ய­தாகக் கூறி அல் சுஹை­ரியா மத்­ர­சாவின் மாண­வர்கள் சிலர் சார்பில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள அடிப்­படை உரிமை மீறல் மனுக்­களும் உயர் நீதி­மன்றில் விசா­ர­ணைக்கு ஏற்­கப்­பட்­டுள்­ளன. இவ்­வா­றான நிலை­யி­லேயே, அதே சாட்­சி­யங்­களை மைய­ப்ப­டுத்தி மேலும் நால்வர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.


இந் நிலையில் கைது செய்­யப்­பட்ட நால்­வரும் கடந்­த­வாரம் கோட்டை நீதி­மன்றில் ஆஜர் செய்­யப்­பட்ட நிலையில் அவர்­களை எதிர்­வரும் 31 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு கோட்டை நீதவான் திலின கமகே உத்­த­ர­விட்­டுள்ளார்.

அனஸ் அன்வர் முகம்­மது ஜுபைல், அப்துல் ஹமீத் ஜாபர் எனும் இரு விரி­வு­ரை­யா­ளர்கள் மற்றும் அந்த சந்­தர்ப்­பத்தில் அவ்­வி­டத்­தி­லி­ருந்த  முக­மது அசிபத் அபு­பக்கர் சித்திக், ராவுத்தர் நைனா அஸநாத் மரிகார்  எனும் நால்­வரே இவ்­வாறு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர்.


சட்ட மா அதி­பரின் ஆலோ­சனை என கூறிக் கொன்டு, வெற்றுக் கட­தா­சி­களை முன் வைத்து சந்­தேக நபர்­களை விளக்­க­ம­றி­யலில் வைக்­கக்­கோ­ரு­வது பொருத்த மற்­றது என இதன்­போது சி.ஐ.டி.யினரை நோக்கி அதி­ருப்தி தெரி­வித்த நீதிவான் குறித்த நான்கு சந்­தேக நபர்கள் தொடர்­பி­லான சாட்­சி­யங்­களின் சுருக்­கத்தை அடுத்த தவ­ணையில் நீதி­மன்றில் முன்­வைக்­கு­மாறும் இதன்­போது நீதவான் சி.ஐ.டி.யின­ருக்கு  உத்­த­ர­விட்டார்.

நீதித்­துறை தொடர்பில் நாட்டு மக்­க­ளுக்கு அதி­ருப்தி ஏற்­ப­டாத வகையில் சந்­தேக நபர்­களை விளக்­க­ம­றி­யலில் வைக்கக் கோரும் போது  குற்றப் புல­னாய்வு திணைக்­களம் நடந்து கொள்ள வேண்டும் என  நீதவான் இதன்­போது குறிப்­பிட்டார். எதிர்­வரும் நாட்­களில் சாட்­சி­யங்­களின் தொகுப்பை பரி­சீ­லித்து சந்­தேக நபர்கள் தொடர்பில் உரிய உத்­த­ரவு பிறப்­பிக்­க­வுள்­ள­தாக நீதவான் இதன்­போது தெரி­வித்தார்.


சந்­தேக நபர்கள் சார்பில் ஆஜ­ரான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி மைத்­திரி குண­ரத்ன உள்­ளிட்ட சட்­டத்­த­ர­ணிகள் குழாம் இதன்­போது வாதங்­களை முன் வைத்­தது.


சட்­டமா அதி­பரின் பணிப்­பு­ரைக்கு அமைய சந்­தேக நபர்கள் கைது செய்­யப்­பட்­ட­தாக குற்­றப்­பு­ல­னாய்வு திணைக்­களம் நீதி­மன்றில் தெரி­வித்­துள்­ளது. சாட்­சி­யங்­களின்  அடிப்­ப­டையில் சந்­தேக நபர்­களை கைது செய்ய வேண்டும். பொலிஸார் விசா­ரணை நடத்தி மூன்று ஆண்­டு­க­ளுக்கு பின்னர் கைது செய்­கின்­றனர். பல  வழக்­குகள் உயர் நீதி­மன்­றத்தில் விசா­ரிக்­கப்­ப­டு­கின்­றன. இந்த வழக்கில்  சந்­தேக நபர்கள் செய்த குற்­றங்கள் தொடர்­பான ஆதா­ரங்கள் எதுவும் முன்­வைக்­கப்­படவில்லை.  சந்­தேக நபர்கள் எவ்­வித ஆத­ரங்­க­ளு­மின்றி கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

சந்­தேக நபர் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்டால் ஆதா­ரங்­களைத் தொகுக்க வேண்டும். சட்­டமா அதி­ப­ருக்கோ அல்­லது உயர் பொலிஸ் அதி­கா­ரி­க­ளுக்கோ எந்த முடிவும் எடுக்க முடி­யாது. வலு­வான ஆதா­ரங்­களின் அடிப்­ப­டையில் உத்­த­ர­வுகள் பிறப்­பிக்­கப்­பட வேண்டும். நீதி­மன்­றத்தின் விருப்­பு­ரி­மையை  தவ­றாக பயன்­ப­டுத்த முடி­யாது. சட்­டமா அதிபர் திணைக்­க­ளமும் குற்றப் புல­னாய்வுத் திணைக்­க­ளமும் எவ்­வித அடிப்­ப­டை­யு­மின்றி செயற்­ப­டு­கின்­றன. சந்­தேக நபர்கள் நால்­வ­ருக்கு எதி­ராக போதிய சாட்­சி­யங்கள் இல்­லா­ததால் அவர்­களை விடு­விக்க வேண்டும் என  ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி மைத்­திரி குண­ரத்ன நீதி­மன்றில் கோரிக்கை விடுத்தார்.


இதன்­போது  நீதிவான் திலின கமகே, சந்­தேக நபர்கள் தொடர்பில் இறுதி அறிக்கை சமர்ப்­பிக்­கப்­ப­ட­வில்லை.


தமக்கு  சட்ட மா அதிபர் ஆலோ­சனை வழங்­கி­ய­தாக சி.ஐ.டி.யினர்  கூறிய போதிலும் அறிக்­கைகள் எதுவும் சமர்­பிக்­கப்­ப­ட­வில்லை.


விசா­ரணை அதி­கா­ரி­களின் கோரிக்­கையின் பேரில் இரண்டு வார கால அவ­காசம் அளிக்­கப்­பட்­டுள்­ளது. அதன் பின்னர் சாட்சி சுருக்க  அறிக்­கை­களை பரி­சீ­லித்து  உரிய உத்­த­ரவு பிறப்பிக்கப்படும் என்றார். – Vidivelli

No comments

Powered by Blogger.