Header Ads



பிரதமர் பதவி பற்றி நாமல்


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சதித் திட்டங்களூடாகப் பிரதமர் பதவியைப் பெறுவதற்குத் தயாராகவில்லை என்றும், மக்கள் ஆணையின்படி, அவர் மீண்டும் பிரதமர் பதவியைப் பெறுவதற்குத் தயாராகவுள்ளார் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும், மஹிந்த ராஜபக்க்ஷவின் புதல்வருமான நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.


ஊடகங்களிடம் இன்று கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,


“மஹிந்த ராஜபக்ச மக்களுக்காகவே பிரதமர் பதவியை விட்டு வெளியேறினார்.


அவர் மீண்டும் இந்த நாட்டின் தலைமைக்கு திரும்பினால், அது மக்களின் விருப்பத்துடனேயே அமையும் எனவும் நாமல் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.