Header Ads



தமிழர் விவகாரத்தில் ரணில், எப்படி இருக்கிறார் தெரியுமா..?


தமிழ் மக்களை ஏமாற்றுவதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறியாக இருக்கின்றாரே தவிர  தமிழர்களுக்கு ஒரு தீர்வை வழங்க தயாராக இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.


கிளிநொச்சியில் அமைந்துள்ள அவரது அலுவலகமான அறிவகத்தில் இன்று (13-05-2023) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.


மேலும் தெரிவிக்கையில், அண்மையில் ஜனாதிபதியுடன் நடைபெற்ற சந்திப்பின்போது தொல்லியல் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டு ஆக்கிரமிக்கப்படுகின்ற காணிகள் தொடர்பில் எடுத்துக் கூறியிருந்தோம்.


அந்த இடத்தில் தொல்லியல் திணைக்களமும் இருந்துள்ளது. அவ்வாறான நடவடிக்கைகளை நிறுத்துமாறு உத்தரவிட்டிருந்தார்.


ஆனால் எதிர்வரும் 18 ஆம் திகதி உருத்திரபுரம் சிவாலயத்தின் காணியை அளவீடு செய்வதற்கான கடிதங்களை ஆலய நிர்வாகத்திற்கு அனுப்பி இருக்கின்றது.


இவ்வாறு ஒரு புறத்தில் தமிழர்களுக்கு தீர்வை வழங்குவதாக தெரிவித்து பேச்சுக்களை நடத்திக்கொண்டு மறுபுறத்தில் இவ்வாறு காணி அளவீடுகளை செய்ய முனைவது என்பது மக்களை ஏமாற்றுகின்ற ஒரு செயலாகவே காணப்படுகின்றது.


கடந்த 09ஆம் திகதி நாடாளுமன்றத்தில் வடக்கு மற்றும் கிழக்கிலே தமிழர்களுடைய வழிபாட்டிடங்கள் இடித்தளிக்கப்பட்டு புத்தர் சிலைகள் நிறுவுதல் விகாரைகள் அமைக்கப்படுகின்றன.


இந்த விடயத்தை நான் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்திருந்தேன். அது தொடர்பாக இற்கும் மேற்பட்ட இடங்களையும் அடையாளப்படுத்தி ஒரு அறிக்கை ஒன்றையும் சமர்ப்பித்திருந்தேன்.


உருத்திரபுரம் சிவாலயத்தை எதிர்வரும் 18ஆம் திகதி அளவீடு செய்வது தொடர்பில் அறிவிக்கப்பட்டமை தொடர்பாக ஜனாதிபதிக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கின்றேன்.

No comments

Powered by Blogger.