Header Ads



புதிய ஆளுநர்கள் இவர்கள்தானா..?


ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, முன்னாள் அமைச்சர்கள் நவீன் திஸாநாயக்க, தயா கமகே ஆகியோருக்கு ஆளுநர் பதவிகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவருகிறது.


நான்கு மாகாணங்களின் ஆளுநர்களை பதவி விலகுமாறு ஜனாதிபதி செயலகம் ஏற்கனவே அறிவித்துள்ளது.


மேல், வடமேல், வடக்கு, மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர்களையே பதவி விலகுமாறு ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது இங்கிலாந்து பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய பின்னர் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

No comments

Powered by Blogger.