Header Ads



நடுவீதியில் பஸ் வண்டியை கைப்பற்றி, பொலிஸார் செய்த காரியம்


சாரதி அனுமதிப்பத்திரமின்றி கொழும்பிலிருந்து அநுராதபுரம் நோக்கி பஸ் வண்டியை செலுத்தியவரை கொழும்பு  - கண்டி பிரதான வீதியின் பஸ்சியால பகுதியில் நிட்டம்புவ பொலிஸ் போக்குவரத்து பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 


இதையடுத்து, பஸ் வண்டியை பொலிஸார் கைப்பற்றியதுடன், அதிலிருந்து பயணிகள்  வேறொரு பஸ் வண்டிக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.


நேற்று(10) பிற்பகல் 2.30 மணியளவில் நடைபெற்ற இந்த சம்பவத்தில், பஸ் வண்டியை பொலிஸார் கைப்பற்றியதுடன், அனுமதிப்பத்திரமின்றி பஸ் வண்டியை செலுத்தியவரையும் கைது செய்திருந்தனர்.


கைது  செய்யப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.