Header Ads



கனடா பிரதமர் தமது கருத்தை வாபஸ் பெறுவாரா..?


முப்படையினரும் , பொலிஸாரும் இலங்கையில் தமிழினப்படுகொலையை மேற்கொண்டதாக தெரிவித்துள்ள கருத்தை கனேடியப் பிரதமர் மீளப் பெற வேண்டும் என காலி முகத்திடல் மக்கள் அமைப்பு கூறியுள்ளது.


கனேடிய பிரதமரின் கருத்துக்கு எதிர்ப்பினை வெளியிட்டு காலி முகத்திடல் மக்கள் அமைப்பு திங்கட்கிழமை (22) கொழும்பிலுள்ள கனடா உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட் காலி முகத்திடல் மக்கள் அமைப்பின் உறுப்பினர் பலங்கொட கஸ்வத்த தேரர்,


இலங்கையில் முப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து தமிழ் இனப் படுகொலை செய்துள்ளனர் என கனேடிய பிரதமர் தெரிவித்திருந்தார்.

இவ்வாறான கருத்துக்கு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பதிலளிக்க வேண்டியதில்லை. மாறாக ஜனாதிபதியும் , பிரதமரும் நேரடியாக அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிவித்திருக்க வேண்டும்.


அதோடு கனேடிய பிரதமரின் ஆதரமற்ற கருத்துக்களை நாம் முற்றாக எதிர்க்கின்றோம். இலங்கையில் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கனடா அறியாத பல தகவல்களை நாம் , கனடா உயர்ஸ்தானிகராலயத்தில் கையளித்த கடிதத்தில் உள்ளடக்கியுள்ளோம்.


தளதா மாளிகை மீதான தாக்குதல்கள் , ஸ்ரீமகா போதி தாக்குதல் உள்ளிட்ட தாக்குதல்களால் இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். அந்த தாக்குதல்களின் காரணமாக எமக்கும் பதில் தாக்குதல்களை நடத்த வேண்டியேற்பட்டது.


இறுதியில் அனைத்து இன மக்களும் அழிவை எதிர்கொண்டனர். இவற்றை ஜனாதிபதியும் , பிரதமரும் கனடாவுக்கு தெளிவுபடுத்த வேண்டும். இவ்விடயத்தில் ஜனாதிபதி ஏன் அமைதி காக்கின்றார்?


சிங்கள பௌத்த மக்களை இனவாதிகளெனக் குறிப்பிட்டு , எமக்கு கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரத்தை மறுக்கின்றனர்.


ஜனாதிபதியும் , பிரதமரும் இது குறித்து தமது நிலைப்பாட்டை அறிவிக்காவிட்டால் நாம் ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று உரிய நடவடிக்கைகளை எடுப்போம் எனவும் அவர் கூறினார்.   

1 comment:

  1. ஓரிரண்டு முறை கருத்துக்களைத் தெரிவித்து கண்டனங்களைத் தெரிவித்து ஆர்ப்பாட்டங்களை நடாத்தி இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது. ஐரோப்பிய நாடுகள், ஐ.இராச்சியம், கனடா போன்ற நாடுகளில் பல தசாப்தங்களாக வடிவமைக்கப்பட்டு அவை பலவகையிலும் மெருகூட்டப்பட்டு அவை சரி பிழை என்பதை விட திறமையான முறையில் சமூகங்கள் மத்தியில் முன்வைக்கப்படும் போது அவை சமூகத்தின் மத்தியில் செல்வாக்குச் செலுத்துகின்றன. இத்தகைய பிரசாரங்களுக்கு எதிராக உண்மையை முன்வைக்கும் பாரிய திட்டத்தை முன்னாள் வௌிநாட்டு அமைச்சர் காலம் சென்ற கதிர்காமர் அவர்கள் ஒரு நீண்ட காலத்திட்டத்தைத் தீட்டி செயல்படுத்த ஆரம்பித்தார்கள். ஆனால் துரதிருஷ்டவசமாக அரச அதிகாரிகள், ஏன் அரசாங்கத்தின் முக்கிய துறைகளும் இதற்கு ஆதரவளிக்கவில்லை. உண்மையைச் சொல்லப் போனால் இது போன்ற பிரசாரங்களுக்கு எதிராக செயல்படும் திறமையும் மொழியாற்றலும் தியாகமும் அர்ப்பணிப்புமிக்க அரச உயர் அதிகாரிகள் அவசியம். அத்தகைய நபர்கள் இன்று வெறும் தாளில்மாத்திரம் வடிவமைக்கலாம். நிச்சியமாக நிஜ உலகில் அந்த நபர்கள் இல்லை. எனவே இவற்றை எதிர்க்கும் முயற்சிகள் விழலுக்கு நிறைந்த நீர் மாத்திரம்தான்.

    ReplyDelete

Powered by Blogger.