Header Ads



ரணிலுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை உலக காலநிலை நடவடிக்கை மாநாட்டிற்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அழைத்துள்ளது


ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) ஜனாதிபதி மொஹமட் பின் சயீத் அல் நஹ்யான், எமிரேட்ஸ் காலநிலை மாநாட்டை ஆரம்பித்து வைக்கும் முக்கிய நிகழ்வான, உலக காலநிலை நடவடிக்கை உச்சி மாநாட்டில் பங்கேற்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அன்பான அழைப்பை விடுத்துள்ளார். 


இலங்கை மற்றும் அதன் மக்களின் முன்னேற்றம் மற்றும் செழிப்புக்கு அன்பான வாழ்த்துக்களையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்து, ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்கு கடிதமாக இந்த அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.


ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதியினால் அனுப்பப்பட்ட அழைப்புக் கடிதம் ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் கலீத் நாசர் அல்அமெரி அவர்களினால் ஜனாதிபதி விக்ரமசிங்கவிடம் நேற்று (22) உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.