Header Ads



2000 ரூபாய்களுக்காக 6 கொலைகளா..?


யாழ்ப்பாணம் - நெடுந்தீவு பகுதியில் அண்மையில் ஆறு பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதுவரையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் இந்த கொலை சம்பவத்தின் பின்னணியில் 2000 ரூபா தொடர்பான முரண்பாடு ஒன்றே காரணம் என தெரியவந்துள்ளது.


சம்பவம் தொடர்பான பொலிஸ் விசாரணைகளின் படி,  2000 ரூபா திருட்டை மறைக்கவே இந்த ஆறு கொலைகளும் நடந்துள்ளமை தெரியவந்துள்ளது. 


கடந்த மாதம் 22 ஆம் திகதி இந்த படுகொலை சம்பவம் நடந்திருந்தது. நெடுந்தீவு இறங்கு துறைமுகத்திற்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில் ஐந்து பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.


மேலும், 101 வயதான பெண்மணி ஒருவர் படுகாயமடைந்திருந்த நிலையில், யாழப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

No comments

Powered by Blogger.