Header Ads



10 ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்


நடப்பு ஐ.பி.எல் சுற்றின் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் வெற்றிப் பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.


போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற குஜராத் டைடன்ஸ் முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.


அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 172 ஓட்டங்களைப் பெற்றது.


சென்னை அணி சார்பில் ருதுராஜ் கெய்க்வாட் அதிகபட்சமாக 60 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.


இந்நிலையில், 173 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய குஜராத் அணி 20 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 157 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.


அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றது.


இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிி 10 ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.