Header Ads



மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மகிழ்ச்சியான தகவல்

பாடசாலை புத்தகப் பைகள் மற்றும் காலணிகளின் விலையை உடனடியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் அமைச்சில் இன்று(11) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டபோதே அமைச்சர் இதனை வலியுறுத்தியுள்ளார்.


இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “தற்போது காலணி மற்றும் பைகள் இறக்குமதி முற்றாக நிறுத்தப்பட்டு உள்ளூர் உற்பத்திக்கான மூலப்பொருட்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்படுகின்றன.


டொலரின் பெறுமதி வீழ்ச்சிக்கு ஏற்ப உள்ளூர் சந்தையில் பாடசாலை பைகள் மற்றும் காலணிகளின் விலை குறைக்கப்பட வேண்டும்.


இது தொடர்பில் ஆராய்ந்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை வழங்குமாறு வர்த்தகம் மற்றும் முதலீட்டு கொள்கைகள் திணைக்களத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


விலை குறையவில்லை என்றால் உடனடியாக அதிபருக்கு அறிவித்து விலையை குறைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” - என்றார்.


No comments

Powered by Blogger.