Header Ads



ஊருக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்


- பாறுக் ஷிஹான் -


யானைகள் திடிரென ஊருக்குள் உட்புகுந்து மக்களின் உடமைகளுக்கு சேதம் விளைவிக்கின்ற சம்பவங்கள் அண்மைக்காலமாக  பதிவாகியுள்ளன.


அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேனைக்குடியிருப்பு நற்பிட்டிமுனை பகுதிகளில் இரவு அதிகாலை வேளைகளில் கடந்த 3 நாட்களாக  திடிரென யானைகள் உட்புகுந்து     அட்டகாசம் செய்வதுடன்  பொதுமக்களின் சொத்துக்களுக்கும்  சேதம் விளைவித்துள்ளன.


மேற்குறித்த  பகுதிகளில்  இவ்வாறு  யானைகள் ஒன்றன் பின் ஒன்றாக திடிரென  உட்புகுந்து மதில்கள்   கட்டிடங்களை உடைத்து  சேதம் விளைவித்து வருகின்றன.

மேலும் வேளாண்மை செய்கைக்காக   விதைப்பதற்கு வைத்திருந்த முளைநெற்களையும் சேதப்படுத்தி வருகின்றதுடன் பொது  மக்களும்  அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.


இது தவிர குறித்த யானைகள் அங்குள்ள  பொதுமக்களின் வீட்டுத்தோட்டம் என்பவற்றையும் பிடுங்கி சேதமாக்கி தப்பி செல்வதாகவும்  சம்பவம் தொடர்பில் பொலிஸார் மற்றும் வனபரிபாலன திணைக்களத்திற்கும் பொதுமக்கள்  அறிவித்துள்ளதாக குறிப்பிட்டனர்.


மேலும் அண்மைக்காலமாக தினம் தோறும் இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறுவதனால் யானைக்கூட்டத்தை கட்டுப்படுத்தி காட்டிற்கு விரட்டுவதற்கு அவ்விடத்திற்கு வனஜீவராசிகள் திணைக்களம் வருகை தருவதில்லை என்கின்ற குற்றச்சாட்டு பொதுமக்கள் மத்தியில் உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.


No comments

Powered by Blogger.