Header Ads



அலி சப்ரி, சாணக்கியன் சொற்போர் - பாராளுமன்றத்தில் நடந்தது என்ன...?


இலங்கை வெளிவிகார அமைச்சர் அலி சப்ரி, தம்மிடம் மன்னிப்பு கோர வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான இரா. சாணக்கியன் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்ததையடுத்து, அலி சப்ரிக்கும் சாணக்கியனுக்குமிடையி கடும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.


இதனையடுத்து, தன்னைக் குறித்து அமைச்சர் அலி சப்ரியால் தெரிவிக்கப்பட்ட நாடாளுமன்றத்துக்கு பொருத்தமற்ற கருத்துக்கள் குறித்து சிறப்புரிமைகள் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.


நாடாளுமன்றத்தில் சிறப்புரிமைப் பிரச்சினை ஒன்றினை முன்வைத்து உரையாற்றியபோதே இன்று (27.04.2023) அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.


மேலும் தெரிவிக்கையில், அமைச்சர் மனுச நாணயக்கார என்னைப் பார்த்து புலி என்று கூறியிருந்தார். இவ்வாறான அரசியல் எம்மிடத்தில் காணப்படக்கூடாது. நாம் ஒருவரை ஒருவர் மதித்து நடக்க வேண்டும்.


அமைச்சரவை அமைச்சர்கள் இவ்வாறான வார்த்தைப் பிரயோகங்களை இந்த உயரிய சபையில் பயன்படுத்துவது வருத்தத்திற்கு உரியதாகும்.


இவ்விடயம் தொடர்பாகவும் நாடாளுமன்ற தத்துவங்கள் சிறப்புரிமைகள் சட்டத்தின் கீழ் நான் சிறப்புரிமை பிரச்சினை ஒன்றை எழுப்ப வேண்டியுள்ளது.


மேலும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நான் இந்த நாடாளுமன்றத்தில் இலங்கை தொடர்பிலேயே பேசுகின்றேன். மட்டக்களப்பு மாவட்டமும் இலங்கையில் ஒரு மாவட்டம் என்று கூறினார்.


அத்துடன், நான் ஒரு பிரிவினைவாதி, மதவாதி என்று என்னைக் குறிப்பிட்டார்கள். இவ்வாறான வார்த்தைப் பிரயோகங்கள் நாடாளுமன்றத்துக்கு பொருத்தமானது இல்லை என்றே நான் இங்கு குறிப்பிடுகின்றேன்.


வெளிவிவகார அமைச்சர் என்னை இங்கு தேவையற்ற விதத்தில் விமர்சித்துள்ளார்.


நான் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டவன். எனினும் வெளிவிவகார அமைச்சர் தேசியப் பட்டியல் உறுப்பினராவார்.


எனது மக்கள் சார்பாக அவர்களது பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்புவதற்கான கடப்பாடும் பொறுப்பும் எனக்குக் காணப்படுகின்றது.


ஒரு குறிப்பிட்ட நபரை திருப்திப்படுத்துவதற்காக அவர் நியமிக்கப்பட்டு இருக்கலாம். நான் எனது சார்பாக பொறுப்பான அமைச்சிடம் மன்னிப்புக்கேட்டுக் கொள்கின்றேன்.


மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் நான் இந்த நாடாளுமன்றத்தில் அந்த விடயங்களைச் சுட்டிக்காட்ட முனைந்தபோது அந்த கேள்வியை கேட்பதற்கு எனக்கு நேர அனுமதி மறுக்கப்பட்டது.


அன்றைய தினம் அந்த விடயத்திற்கு உரிய அமைச்சரும் இங்கு சமூகமளித்திருக்கவில்லை. எனவே அதற்காக அவர்கள் பதில் கூறவில்லை.


எனினும் நான் அந்த வினாவை எழுப்பியபோதும் எனக்கான நேரத்தினைக் கோரியபோதும் அமைச்சர் மனுச நாணயக்கார என்னை புலி என்றும் இனவாதி என்றும் குறிப்பிட்டார்.


அமைச்சர் மனுச நாணயக்காரவே என்னை புலி என்றும் இனவாதி என்றும் அழைத்தார்.


மனுச நாணயக்கார இவ்வாறு குறிப்பட்டதை நினைத்து நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். பொறுப்பான அமைச்சர்கள் என்ற விதத்தில் இவ்வாறு நடந்துகொள்வது வேதனைக்குரிய விடயமாகும் என குறிப்பிட்டுள்ளார்

1 comment:

  1. காற்றுப் போய் தூர்ந்து போன தனது உரிமைகளைப் பாதுகாக்க தன்னைப் பாராளுமன்றம் அனுப்பிய டியூபுக்குச் சார்பாகத் தான் சப்ரி பேச வேண்டும். அந்த வீணாப்போன டியூப் பற்றி யாரும் பொருட்படுத்துவதில்லை. எனவே அலி சப்ரிக்கு பேசுவதற்கு யாருமில்லை. ஆனால் சாணக்கியனை மட்டக்களப்பு மக்கள் வாக்குப் போட்டு அவர்களின் தேவைகளைப் பாராளுமன்றத்தில் முன்வைத்து அவற்றுக்குத் தீர்வு காண அனுப்பப்பட்டவர். அவர் கண்டிப்பாக மட்டக்களப்பு மக்களின் தேவைகள், அபிலாசைகள் பற்றி பாராளுமன்றத்தில் கதைத்துத்தான் ஆக வேண்டும். அதனைத் தடுப்பதற்கு அலி சப்ரிக்கு எந்த அதிகாரமுமில்லை. அவர் தனது படி போகும் என்ற பயத்தில் தற்போது ரணிலுக்கு காக்காவை இறுக்கிப் பிடிக்கின்றாா். அது அவருடைய இருப்புக்கு போடும் சீமெந்து என்பது எல்லோருக்கும் புரிகிறது. அந்த கேடு கெட்ட வேலையை சாணக்கியன் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பதை சப்ரி புரிந்து கொண்டால் போதும்.

    ReplyDelete

Powered by Blogger.