இலவசமாக நடாத்தப்படும் மத்ரசாக்கள், அனாதை, முதியோர் இல்லங்கள் தொடர்பு கொள்ளுங்கள்
அனைவருக்கும் இனிய சலாம் அஸ்ஸலாமு அலைக்கும், வணக்கம்
என்னிடம் பலர் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு, நான் பதிவு செய்த விடயத்தினைப் பார்த்து, வாழ்த்துக்களை தெறிவித்தார்கள். பலர் எனக்காகவும் எனது குடும்பத்திற்காகவும். எனது தொழில் வளர்ச்சிக்காவும் துஆ பிராத்தனையும் செய்தீர்கள். அல்ஹம்துலில்லாஹ்.
மேலும் நீங்கள் என்னிடம் கேட்டீர்கள், இது உங்களது கிண்ணியாவில் உள்ளவர்களுக்கு மட்டும் தானா?
மற்றும் முஸ்லிம்களுக்கு மட்டுமா? என்று அப்படி இல்லை சகோதர்களே, நண்பர்களே,பெரியவர்களே, என்னிடம் சொந்தமாக வாகனம் எதுவும் கிடையாது.
எனக்கும் உங்களது ஊர்களுக்கு வந்து, இப்படியான சேவையினை செய்ய ஆசைதான். நீங்கள் விரும்பினால் நான் மற்றும் எனது தோழர்கள் அழைத்து வந்து, மாதத்தில் இரண்டு நாட்கள் இலவசமாக சிகையலங்காரம் (தலை முடி வெட்டிக் ) செய்து கொடுக்கின்றோம்.
இது மதத்திற்கு அப்பால்பட்ட. என்னால் முடியுமான சிறியதோர் சேவையாகும்.
*அனாதை இல்லம்
*முதியோர் இல்லம்
*இலவசமாக நடாத்தப்படும் மத்ரசாக்கள்
இருந்தால் என்னை தொடர்ப்பு கொண்டால் நாங்கள் நேரடியாக வந்து, இலவசமாக செய்து தருகின்றோம்.'
இலங்கையில் உள்ள எந்த மாவட்டமாக இருந்தாலும் சரி நாங்கள் வருகின்றோம்.
நீங்கள் எங்களுக்கு தங்குமிட வசதியினை மற்றும் செய்து கொடுத்தால் பாேதும்.
தொடர்புகளுக்கு
ஏ.எஸ்.எம். ஜிப்ரி, சஜி சலூன், கிரீன் வீதி மஃறூப் நகர், கிண்ணியா - 03.
0754342403.
* இத் தகவல் மற்றவர்களை சென்றடையும் வகையில் அதிகமாக Share பன்னுங்க.
Post a Comment