Header Ads



அக்குரணையின் தற்போதைய நிலவரம் - டெய்லி மிரர்


கண்டி, அக்குரணையில் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அதிகாரிகள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


மேலதிக பொலிஸ் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இராணுவத்தினரும் தயார் நிலையில் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


பொலிஸாரின் வேண்டுகோளுக்கு இணங்க அப்பகுதியில் இராணுவத்தினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்தார்.

டெய்லி மிரர்

(தர்ஷன சஞ்சீவ பாலசூரிய)

No comments

Powered by Blogger.