Header Ads



சனத் தலைமையில் பர்வீஸ் மஹரூப் உள்ளிட்ட, புதிய 5 பேர் அடங்கிய குழு


இலங்கையின் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய, இலங்கை துடுப்பாட்டத்திற்கான  தொழிநுட்ப ஆலோசனைக் குழுவின் தலைவராக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவால் நியமிக்கப்பட்டுள்ளார்.


ஜயசூரியவுடன் குழுவின் உறுப்பினர்களாக பர்வீஸ் மஹரூப், சரித் சேனாநாயக்க, அசந்த டி மெல் மற்றும் கபில விஜேகுணவர்தன ஆகியோர் இணைந்து கொள்ளவுள்ளனர்.


முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச பதவியில் இருந்த போது இதே போன்ற ஒரு குழு மஹேல ஜெயவர்தனவின் தலைமையில் இருந்தது. ஆனால் அந்தக் குழு நாமலின் பதவி ராஜினாமாவைத் தொடர்ந்து கடந்த ஆண்டு கலைக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.