Header Ads



வீட்டை விட்டு ஓடிய 3 சிறுவர்களை தேடும் பொலிஸார்


குடும்ப பொருளாதார நிலை காரணமாக மூன்று சிறுவர்கள் வேலை தேடி வீட்டை விட்டு ஓடியுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இவ்வாறு வீட்டை விட்டுச் சென்ற சிறார்கள் மூவரும் வென்னப்புவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்விகற்கும்  14-15 வயதுக்கிடைப்பட்டவர்களாவர்.


வீட்டை விட்டு சென்ற சிறுவர்களில் ஒருவர், குடும்பப் பொருளாதார நிலை காரணமாக தான் வேலை ஒன்றைத் தேட வேண்டுமென தனது பாட்டியிடம் சிறிது நாட்களுக்கு முன் கூறியதாக பொலிஸ் விசாரணைகளில் தெரிகிறது.


மற்ற இருவரும் இசை நிகழ்ச்சியை பார்க்க போவதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


வேலைக்குப் போக வேண்டும் எனக்கூறிய மாணவன் மற்ற இரு நண்பர்களையும் வீட்டிலிருந்து அழைத்துச் சென்றிருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 


குறித்த பாடசாலை மாணவர்கள் மூவரும் கடந்த 14 ஆம் திகதி வீடுகளை விட்டு ஓடிய நிலையில், அவர்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

No comments

Powered by Blogger.