குரங்குகள் ஏற்றுமதி - சீனாவுடன் 3 சுற்று பேச்சுக்கள் நிறைவு, Fake படங்களும் வெளியாகின
இலங்கைக் குரங்குகள் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகக் கூறப்படும் நிலையில், விமான நிலையத்தில் குரங்குகள் செல்பி எடுப்பது மற்றும் விமானத்தில் பயணம் செய்வது போன்ற போலியான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சீனாவிலுள்ள சுமார் 1000 மிருககாட்சிசாலைகளுக்கு இலங்கை குரங்குகளை ஏற்றுமதி செய்வதற்கான கோரிக்கை சீன அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சீன பிரதிநிதிகள் இலங்கை அதிகாரிகளுடன் மூன்று சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்துள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அந்த குரங்குக்கூட்டத்துடன் தியவன்னாவையில் உள்ள 225 வாலில்லாத மந்தி(ரி)களையும் ஒரே கன்டெய்னரில் போட்டு சீனாவுக்கு ஏற்றமதி செய்தால் இலங்கையின் அடிப்படைப் பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டுவிடும்.
ReplyDelete