Header Ads



ஒரு இலட்சம் ரூபாய்க்கு ஒரு கொலை முயற்சி - ஆனமடுவயில் அதிர்ச்சி, நீர்கொழும்பில் 2 பேர் கைது


கள்ளத் தொடர்பு ஒன்றை தொடர்ந்து பேணுவதற்கான தன்னுடைய நண்பரின் கழுத்தை அறுக்க ஒரு இலட்சம் ரூபா வழங்கிய பிரதான சந்தேகநபர் மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்த நண்பரின் மனைவி உட்பட நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


ஆனமடுவ பொலிஸார் சந்தேகநபர்களை நேற்று (23) கைது செய்திருந்தனர்.


ஆனமடுவ பலியகம, நெபடவாவ பகுதியைச் சேர்ந்த பிரதான சந்தேகநபர் மற்றும் தனது திருமணமான கணவருக்கு ஆதரவளித்து அவரைக் கொலை செய்ய உதவிய சந்தேகத்திற்குரிய மனைவி ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.


அந்த சம்பவத்தில் குறித்த நபரைக் கொல்வதற்கான ஒப்பந்தத்தை நீர்கொழும்பில் வசிக்கும் இரண்டு சந்தேக நபர்கள் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


விவசாயம் மற்றும் கால்நடைப் பண்ணையில் ஈடுபட்டு வரும் விவசாயி ஒருவரின் மனைவியுடன் இரகசியமாக தொடர்பு வைத்திருந்த குறித்த விவசாயியின் நண்பரே இவ்வாறு கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


குறித்த விவசாயியின் மனைவி வெலிமடை பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.


மேலும் அந்த நபரை அவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.


மேலும், இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கணவருடன் வசித்து வரும் நிலையில், அந்த பெண் தனது கணவரின் நண்பருடன் சில காலம் ரகசியமாக தொடர்பு வைத்திருந்தார்.


இதன் தொடர்ச்சியால் கணவனிடம் எந்நேரமும் பிடிபட்டால் பிரச்சினை ஏற்படும் நிலை உருவாகும் என்பதால் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் பிரதான சந்தேக நபருடன் இணைந்து கொலைத் திட்டத்தை மேற்கொண்டுள்ளார்.


இதன்படி, வெலிமடையில் வசிக்கும் பெண்ணும் அவரது குழந்தைகளும் வெலிமடையில் உள்ள பெற்றோரை பார்க்கச் சென்ற வேளையில் குறித்த நபரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.


அதன்படி, இந்த பெண் தனது குழந்தைகளுடன் வெலிமடையில் இருந்தபோது, ​​நீர்கொழும்பில் வசிக்கும் இருவரிடம்டம் ஒரு லட்சம் ரூபாய் பணம் தருவதாக வாக்குறுதி அளித்து தனது கணவலை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


அந்த திட்டத்தின்படி நேற்று இரவு விவசாயி தூங்கிக் கொண்டிருந்த போது யாருக்கும் சந்தேகம் வராத வகையில் கொலையாளிகள் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.


எனினும், உறங்கிக் கொண்டிருந்த விவசாயியின் கழுத்தில் பலத்த வாள் வீச்சு தவறி விழுந்ததுடன், கொலையாளி ஒருவரின் வலது கையிலும் பலத்த அடி விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


கொலையாளியின் விரல்கள் அனைத்தும் துண்டிக்கப்பட்டதாகவும், விவசாயியின் கழுத்திலும் வாள் வெட்டு விழுந்ததாகவும் கூறப்படுகிறது.


இதன்போது விவசாயியின் சத்தத்தை கேட்டு நேற்று முன்தினம் இரவு திடீரென விவசாயியின் வீட்டிற்கு வந்திருந்த உறவினர் அவ்விடத்திற்கு ஓடி வந்த போது சந்தேக நபர்கள் தப்பி ஓடியுள்ளனர்.


இதனையடுத்து குறித்த உறவினர் சத்தம் போட்டு கூச்சலிட்டதையடுத்து அயலவர்கள் வீட்டிற்கு விரைந்து வந்து படுகாயமடைந்த விவசாயியை உடனடியாக ஆனமடுவ வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.


காயமடைந்தவர் ஆனமடுவ வைத்தியசாலையில் இருந்து சிலாபம் பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


சம்பவத்திற்கு முகங்கொடுத்த விவசாயி தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.


ஆனால் ஏற்கனவே வெலிமடை பகுதிக்கு சென்ற மனைவி தொடர்பில் சந்தேகம் எழுந்த விசாரணைகளின் படி சம்பவத்துடன் தொடர்புடைய விவசாயியின் உற்ற நண்பனை கைது செய்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னரே சம்பவத்தின் மூலகாரணம் கண்டுபிடிக்க முடியும்.


இதன்படி, ஒப்பந்த கொலையாளிகளாக ஒப்பந்தம் செய்யப்பட்ட நீர்கொழுமப்பு பிரதேசவாசிகள் இருவரும் ராகம பொது வைத்தியசாலையில் இரண்டு பொய்யான பெயர்களில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸ் குழுக்களால் கைது செய்ய முடிந்தது.


அதேநேரம், வெலிமடை பகுதியைச் சேர்ந்த விவசாயியின் மனைவி கைதுசெய்யப்பட்டதுடன், விவசாயியின் கழுத்தை அறுப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட வாள்கள் மற்றும் கத்திகள் அருகிலுள்ள ஆற்றில் வீசப்பட்டிருந்தன.

No comments

Powered by Blogger.