Header Ads



பிறையை கண்டால் அறிவிக்கவும்

 

ஹிஜ்ரி 1444 சவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு 21 ஆம் திகதி, வெள்ளிக்கிழமை மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற இருக்கின்றது.


நாட்டின் எப்பிரதேசத்திலாவது சவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டால் தகுந்த ஆதாரங்களுடன் 0112432110, 0112451245, 0777316415 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு அறிவிக்குமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் முஸ்லிம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.


இம்மாநாட்டில் கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உறுப்பினர்கள் மற்றும் உலமாக்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். 


1 comment:

  1. ஏன் இன்று இந்த விளம்பரத்தைப் பிரசுரித்தீர்கள்? பொதுமக்கள் இன்றைக்கே பிறை பார்க்கத் தொடங்கி அதன் பித்னாக்களும் வாதப்பிரதிவாதங்களையும் இன்று ஆரம்பித்து விடுவார்கள். பிறை பார்ப்பது நாளை எனவே இந்த விளம்பரத்தை நாளை பிரசுரித்திருக்கலாம். ஏனெனில் முஸ்லிம் சமூகம் தலைப்பை மாத்திரம் பார்க்கும் சமூகம். செய்திகளை வாசித்து விளங்கிக் கொள்ளும் பொறுமையும் சகிப்புத் தன்மையும் அந்த சமூகத்தின் பெரும்பாலானவர்களிடம் கிடையாது. இந்த அறிவிப்பை நன்மைக்காக அன்றி முதலில் பித்னாவின் ஆரம்பமாகவே கருதும் மனநிலை பெரும்பாலானவர்களிடம் காணப்படுகின்றது. இந்த மனோநிலையை அனுசரித்தே எல்லா விடயங்களையும் நோக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைதான் இந்த சமூகத்தின் நிலைப்பாடு. இதை விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கின்றது.

    ReplyDelete

Powered by Blogger.