Header Ads



2 பேரை தாக்கி 5 இலட்சம் கொள்ளையடித்த பொலிஸ் கான்ஸ்டபிள்


இருவரை தாக்கி ஐந்து இலட்சம் ரூபாவை கொள்ளையடித்த குற்றச்சாட்டின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 


இந்த சம்பவம்,மிரிஹான பத்தேகன பிரதேசத்திலேயே இடம்பெற்றுள்ளது. நுகேகொட பிரிவு போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் மற்றுமொருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக மிரிஹான தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.  


இந்தக் கொள்ளையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும்  மேலும் இருவரை கைது செய்வதற்கான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்


No comments

Powered by Blogger.