Header Ads



உம்றா செய்ய, ஆடு மேய்த்து 15 வருடங்களாக பணம் சேகரித்தவருக்கு, வந்து குவியும் வாய்ப்புகள்


 பாகிஸ்தானைச் சேர்ந்த இந்த முதியவர், ரமலான் மாதத்தில் மதீனாவில் இருந்து  காலணியின்றி, எளிய உடையை அணிந்து  வெளியேறும் போடு எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் உலகம் முழுவதும்  மில்லியன் கணக்கானவர்களின் இதயங்களை வென்றது


நிகழ்வுகளின் ஒரு அசாதாரண திருப்பமாக, அந்த நபரின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது, அங்கு மக்கள்  தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். 


பாகிஸ்தானைச் சேர்ந்த இவர், உம்ரா செய்வதற்காக 15 ஆண்டுகளுக்கும் மேலாக போதுமான பணத்தை சேகரித்த ஆடு மேய்ப்பவர் என்று கூறப்படுகிறது.


அவரது எதிர்பாராத புகழ், இப்போது பல சவுதி மற்றும் பாகிஸ்தானியர்களால் எண்ணற்ற இலவச ஹஜ் மற்றும் உம்ரா சலுகைகளைப் பெற காரணமாக அமைந்தது. பல பேர் அவருக்கும் இலவச ஹஜ் மற்றும் உம்ரா சலுகைகளை வழங்க முன்வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.