Header Ads



ஆபத்துள்ள நாணயமாக, இலங்கை ரூபா


 முக்கிய பொருளாதார கோட்பாடுகளின் பகுப்பாய்வின் அடிப்படையில் இவ்வருட இறுதிக்குள் இலங்கை ரூபா அதிக ஆபத்துள்ள நாணயமாக மாறலாம் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரக் கல்விப் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.


டொலரின் மதிப்பு வீழ்ச்சியும் ரூபாவின் பெறுமதி உயர்வும் அரசாங்கத்தின் குறுகிய காலத்திட்டம், எனினும் இவ்வருட இறுதிக்குள் கடுமையான பொருளாதார வீழ்ச்சியை முன்னறிவிப்பதாகவும் பேராசிரியர் வந்த அத்துகோர குறிப்பிட்டுள்ளார்.


பொருளாதார ஆய்வின் அடிப்படையில், இது ரூபாவை வலுப்படுத்துவது அல்ல, மாறாக ரூபாவை செயற்கையாக வலுப்படுத்துவது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.