Header Ads



மாணவர்களும், விரிவுரையாளர்களும் சிறை பிடிப்பு


சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் முதலாம் வருட மாணவர்கள் சிலரையும் இரண்டு விரிவுரையாளர்களையும் பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலை அறையில் அடைத்து சிறைப்பிடித்து வைத்து மானசீக தாக்கத்தை ஏற்படுத்திய இப்பல்கலைக்கழகத்  தின் 10 மாணவர்களை பலாங்கொடை சமனலவெவ பொலீசார் கைது செய்துள்ளனர்.


கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில பல்கலை நிர்வாகம் சமலனவெவ பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கிணங்க  இவர்கள் பொலீஸ் நிலையத்தில் சரணடைந்ததையடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.


இச்சம்பவம்  தொடர்பாக சப்ரகமுவ பல்கலைக்கழக நிர்வாகம் நடத்திய விசாரணைகளில் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு இணங்க இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.


இச்சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட 12 மாணவர்களில் ஒருவர் ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும்  இன்னும் ஒரு மாணவர் தேடப்பட்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்


கைது செய்யப்பட்ட மாணவர்கள் தொடந்தூவ, கெப்பித்திகொல்லாவ,  உஸ்வெட்டி கொய்யாவ பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிசார் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.