நானும் தற்போது அரசாங்கத்தின் பக்கம்தான் உள்ளேன்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறப்பாகச் செயற்படுவார் என்று நம்புகின்றேன். நானும் தற்போது அரசாங்கத்தின் பக்கம்தான் உள்ளேன் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், நான் அரசியலில் இருந்து ஒதுங்கவில்லை. ஒதுக்க முற்பட்டாலும் ஒதுங்கமாட்டேன்.
களனிப் பகுதிக்கு மீண்டும் சேவையாற்ற வேண்டும். மீண்டும் நாடாளுமன்றம் செல்வேன் என கூறியுள்ளார்.
Post a Comment