Header Ads



ஏமாறுவதை விட்டுவிட்டு தம்முடன் இணையுமாறு சஜித் அழைப்பு


தற்போதைய ஜனாதிபதி எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்த போது,சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் உடன்படிக்கைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அப்போது நிதி அமைச்சராக இருந்த பசில் ராஜபக்சவிடம் கோரினார் எனவும்,தற்போது ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஜனாதிபதியான பின்னரும் கூட சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களை தற்போது மறைத்து வருகின்றார் எனவும்,தமது பதவிகள் மாறியதும் தீர்மானங்களிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


சட்டமன்றம்,நிறைவேற்று மற்றும் நீதித்துறை ஆகியவை இணைந்து செயல்பட்டாலும், நாட்டில் தற்போது சர்வாதிகார நிறைவேற்று அதிகாரமே ஆட்சிமுறையிலுள்ளதாகவும், அதன் மூலம் உயர்நீதிமன்றத்தையும், நீதிபதிகளையும் அவமதித்து மிதிக்கும் நிலைக்கு நாட்டு ஆட்சியாளர்கள் வந்துள்ளனர் எனவும்,நீதிமன்றத் தீர்ப்புகளைக்கூட சவாலுக்குட்படுத்துவதன் மூலம் அரசியலமைப்பின் மூலம் வழங்கப்பட்ட மக்களின் வாக்குரிமைக்கு கூட சவால் விடுக்கப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


ஒரு நாடு என்ற வகையில் நாம் ஒரு திருப்புமுனையை எதிர்கொண்டுள்ளோம் என்றாலும்,தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான யானை காக்கை மொட்டு அரசாங்கம் இதற்கு இடமளிப்பதாக இல்லை எனவும்,இந்தத் திருப்புமுனையை அரசாங்கம் எதிர்கொண்டால் அவர்களுக்கு எந்த உத்தரவாதமும் இல்லாது போகும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


மக்கள் விரோத,மக்கள் எதிர்ப்பு, ஒடுக்குமுறைசார் இந்த அரசாங்கம்,வரி விதித்து,பொருட்களின் விலையை உயர்த்தி மக்களின் கையில் இருக்கும் கடைசி விலங்கைக் கூட பறித்து, பொருளாதாரத்தைச் சுருக்கி வருவதையே செயல்படுத்தி வருவதாகவும், பொருளாதாரத்தை விருத்தி செய்து,மக்களின் கைகளில் பணம் செல்வதற்கான வழிகளை உருவாக்குவதும் தான் நடக்க வேண்டிய செயல்பாடு எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


கேள்வியை குறைப்பதற்காக இந்த வரிச் சுழற்சியை அரசாங்கம்  செயல்படுத்தி வருவதாகவும்,இதனால் பணவீக்கம் குறைவடைந்து நாடு இயல்பு நிலைக்கு மீளும் என நினைத்தாலும் அது உண்மையில் தவறான செயல் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.


நாட்டில் பொருட்களின் விலை அதிகரித்தாலும் அது ராஜபக்ச குடும்பத்திற்கோ அல்லது அவர்களின் ஆதரவாளர்களுக்கோ அது பிரச்சினையாக அமையாது எனவும்,220 இலட்சம் மக்களுக்குமே அது பிரச்சினையாக அமைவதாகவும் எதிர்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


நாட்டில் அரசாங்கத்தால் செய்ய முடியாத பல விடயங்களை கடந்த 3 ஆண்டுகளில், எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு ஐக்கிய மக்கள் சக்தி சாதித்ததாகவும்,வெறும் போச்சுக்களுக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்காமல்,செயல்படுவது தான் ஐக்கிய மக்கள் சக்தியின் இயல்பு எனவும்,எனவே மீண்டும் ஏமாறுவதை விட்டுவிட்டு உண்மையான பதிலைத் தேடும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.


மஹர பிரதேசத்தில் நேற்று (14) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.


No comments

Powered by Blogger.