Header Ads



ரூபாய் மதிப்பு கூடுமா..? குறையுமா..?


 சர்வதேச நாணய நிதியத்தின் பிணையெடுப்பின் நம்பிக்கைக்கு மத்தியில் தற்போது சிறந்த செயற்பாட்டு நாணயமாக மாறியுள்ள இலங்கையின் ரூபாய் 2023 ஆம் ஆண்டின் இறுதியில் டொலருக்கு நிகரான பெறுமதியில் ஐந்தில் ஒரு பங்கை இழக்கக்கூடும் என பிட்ச் பொருளாதார தர மதிப்பீடு தெரிவித்துள்ளது.


2023 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் குழுவின் ஒப்புதலைப் பெற முடியும் என்பதில் நம்பிக்கையுடன் உள்ளதாக பிட்ச் தர மதிப்பீட்டின் இடர் ஆய்வாளர் சீ வாங் டிங் கூறியுள்ளார்.


பலவீனமான பொருளாதாரம் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களுக்கு மத்தியில் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தைப் பின்பற்றுவது அதிகாரிகளுக்கு சவாலாக இருக்கலாம்.


எனவே சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்புதலுக்குப் பிறகு இடையூறுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்று பிட்ச் தர மதிப்பீட்டின் இடர் ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார்.


இலங்கை ரூபாய் ஆண்டு இறுதியில் டொலருக்கு நிகரான பெறுமதி இழக்கும் : பிட்ச் பொருளாதார தர மதிப்பீடு | Rupee To Lose Value Against Dollar By Year End


இந்தநிலையில் இன்று புதன்கிழமை ஒரு டொலருக்கு எதிரான ரூபாயின் பெறுமதி 317.7 ரூபாவாக இருக்கின்றபோதும், இந்த ஆண்டு இறுதிக்குள் ரூபாய் மதிப்பு ஒரு டொலருக்கு 390 ஆகக் குறையலாம் என்று பிட்ச் தெரிவித்துள்ளது.


இலங்கை இன்னும் குறிப்பிடத்தக்க வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தும் தேவைகளைக் கொண்டுள்ளது மற்றும் வரவிருக்கும் மாதங்களில் அதன் வெளிநாட்டு இருப்புத் தாங்கலைக் கட்டியெழுப்ப வேண்டும்.


இது மாற்று விகிதத்தில் எதிர்மறையான அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று பிட்ச் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது.


ஃபிட்ச் கருத்துப்படி, உலகளாவிய நாணய நிலைமைகளை இறுக்குவதன் மூலம் இலங்கை ரூபாவுக்கும் அழுத்தம் கொடுக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.