Header Ads



சர்வதேச அல்-குர்ஆன் போட்டியில் கலந்துகொள்ள ஐக்கிய அரபு அமீரகம் பயணம்


கொழும்பு 12 சேர்ந்த செல்வன் மொஹமட் கன்ஸுல்  இர்பான் உமைர் 2023 மார்ச் மாதம் 23ம்  திகதி முதல் ஏப்ரல் மாதம் 04ம் திகதி வரை  துபாயில் நடைபெறவுள்ள 29வது சர்வதேச அல்-குர்ஆன் மனனப் போட்டியில் இலங்கை சார்பாக கலந்து சிறப்பிக்கவுள்ளார்.


செல்வன் மொஹமட் கன்ஸுல்  இர்பான் உமைர் அல் ஹாபிழ் (புனித குர்ஆனை முழுமையாக மனனம் செய்தவர்) ஆவார். அத்துடன், 2019/2020 ஆம் ஆண்டு  முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் தேசிய ரீதியில் நடாத்தப்பட்ட அல்-குர்ஆன் மனனப் போட்டியில் மூன்றாவது  இடத்தை சுவீகரித்து வெற்றி பெற்றிருந்தார். 


முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் பைசல் ஆப்தின் மொஹமட் கன்ஸுல்  இர்பான் உமைர்க்கு விமானப்பயணச்சீட்டு வழங்கப்பட்டதுடன், வெற்றியுடன் திரும்புவதற்கு  வாழ்த்துகளையும் அவர் தெரிவித்துக் கொண்டார். 


முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர்களான, எம்.எல்.எம் . அன்வர் அலி, கலாசார அபிவிருத்தி உத்தியோத்தர் எம்.எம்.எம். முப்தி இதன் போது கலந்து கொண்டனர்.


இவர்  போட்டியில் வெற்றி பெற்று இலங்கைக்கு பெருமை பெற்றுத் தருவதற்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வாழ்த்துகளைத் தெரிவித்து, பிரார்த்திக்கின்றது.

No comments

Powered by Blogger.