Header Ads



முஸ்­லிம்­களுக்கு மாத்திரம் ஏன் இந்த அநீதி..?


(ஏ.ஆர்.ஏ.பரீல்)


இலங்­கையில் இறக்­கு­மதி செய்­யப்­படும் இஸ்­லா­மிய நூல்கள் மற்றும் குர்ஆன் பிர­தி­களை சுங்­கத்­தி­லி­ருந்து விடு­விப்­ப­தற்கு கையா­ளப்­படும் கடு­மை­யான விதி­மு­றைகள் அர­சி­ய­ல­மைப்பின் 10,12,14 ஆம் பிரி­வு­களை மீறு­வ­தாகும்.


இஸ்­லா­மிய நூல்கள் குர்ஆன் பிர­தி­களை விடு­விப்­ப­தற்கு மாத்­திரம் ஏன் இந்த விதி­மு­றைகள்? மனித உரி­மைகள் ஆணைக்­குழு இது­வி­ட­யத்தில் தலை­யிட்டு நியா­ய­மான தீர்வு பெற்­றுத்­த­ர­வேண்டும் என வை.எம்.எம்.ஏ. பேர­வையின் நம்­பிக்கை பொறுப்­பாளர் சபை உறுப்­பினர் கே.என்.டீன் மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழு­விடம் கோரிக்கை விடுத்­துள்ளார்.


கே.என்.டீன் நேற்று முன்­தினம் மனித உரிமை ஆணைக்­கு­ழு­வினால் அழைக்­கப்­பட்­டி­ருந்தார். இஸ்­லா­மிய நூல்கள்,குர்ஆன் பிர­திகள் இறக்­கு­மதி செய்­யப்­ப­டும்­போது கையா­ளப்­படும் கடு­மை­யான விதி­மு­றைகள் தொடர்பில் வை.எம்.எம்.ஏ.கடந்த வருடம் ஜூன் மாதம் செய்­தி­ருந்த முறைப்­பாட்­டினை விசா­ரணை செய்­வ­தற்­கா­கவே அங்கு அவர் அழைக்­கப்­பட்­டி­ருந்தார்.


இவ்­வி­வ­காரம் தொடர்பில் கே.என்.டீன் விடி­வெள்­ளிக்கு கருத்துத் தெரி­விக்­கையில், எமது நாட்டில் இறக்­கு­மதி செய்­யப்­படும் இஸ்­லா­மிய நூல்கள், குர்ஆன் பிர­தி­களை சுங்­கத்­தி­லி­ருந்தும் விடு­விப்­ப­தற்கு இந்த விதி­முறை பின்­பற்­றப்­ப­டு­கி­றது. ஏனைய மத நூல்­க­ளுக்கு இவ்­வி­தி­முறை பின்­பற்­றப்­ப­டு­வ­தில்லை.


இறக்­கு­மதி செய்­யப்­படும் இஸ்­லா­மிய நூல்கள் மற்றும் குர்ஆன் ஒவ்­வொன்றும் இரு பிர­திகள் புத்­த­சா­சன மற்றும் சமய கலா­சார அலு­வல்கள் அமைச்சின் செய­லா­ள­ருக்கு வழங்­கப்­ப­ட­வேண்டும். அப்­ புத்­த­கங்­களில் குர்­ஆனில் அடிப்­ப­டை­வாத கருத்­துகள், வச­னங்கள் இருக்­கின்­ற­னவா என ஆராய அதற்­கென நிய­மிக்­கப்­பட்­டுள்ள குழுவிடம் வழங்­கப்­படும். பின்பு அவை செய­லா­ள­ரினால் பாது­காப்பு அமைச்­சுக்கு அ-னுப்பி வைக்­கப்­படும். பாது­காப்பு அமைச்சு அனு­மதி வழங்­கினால் மீண்டும் அந்­நூலின் பிர­திகள் குர்­ஆன்­ பி­ர­திகள் புத்­த­சா­சன அமைச்­சுக்கு அனுப்பி வைக்­கப்­படும். அதன் பின்பே அவை சுங்­கத்­தி­லி­ருந்து விடு­விக்­கப்­படும். இவ்­வா­றான விதி­முறை கார­ண­மாக இந்­நூல்­களை, குர்­ஆனை இறக்­கு­மதி செய்யும் இறக்­கு­ம­தி­யா­ளர்கள் பல்­வேறு சிர­மங்­க­ளையும் கால­தா­ம­தத்­தையும் எதிர்­கொள்­கின்­றனர்.


முஸ்­லிம்­களின் நூல்­க­ளுக்கும் குர்­ஆ­னுக்கும் மாத்­திரம் ஏன் இந்த விதி­முறை. எனவே புத்­த­சா­சன அமைச்சின் செய­லா­ளரும், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளமும் வெளி­யிட்­டுள்ள இது தொடர்­பான சுற்று நிரு­பத்தை ரத்துச் செய்ய வேண்டும் என­ அவர் மனித உரிமை ஆணைக்­கு­ழு­விடம் வேண்­டுகோள் விடுத்தார்.


இந்­நி­லையில் புத்­த­சா­சன சமய மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்சின் செய­லாளர், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் மற்றும் முறைப்பாட்டாளரான வை.எம்.எம்.ஏ யின் நம்பிக்கை பொறுப்பாளர் சபை உறுப்பினர் கே.என்.டீன் ஆகியோரை விரைவில் அழைத்து இது தொடர்பில் கலந்துரையாடி தீர்வு பெற்றுத்தருவதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சட்ட ஆலோசகர் தெரிவித்தார்.- Vidivelli

1 comment:

  1. May Allah Bless you Mr. Deen for your efforts. This kind of act is highly appreciated and community needed support. Muslim community should be great full to you and other organizations too come forwards to remove this kind of regulation.

    ReplyDelete

Powered by Blogger.