Header Ads



மகிந்த பிரதமராகுவாரா..? ரணில் கூறிய விடயம்


இந்த அரசாங்கத்தில் மீண்டும் பிரதமர் பதவியைப் பொறுப்பேற்கும் எண்ணம் மகிந்த ராஜபக்சவுக்கு இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.


மகிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக்குவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் அழுத்தம் கொடுப்பதாக தென்னிலங்கை ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் எழுப்பிய கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார். 


அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கு முழு ஆதரவை வழங்குகின்றது.


மற்றும் தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கு ராஜபக்ச தரப்பிலிருந்து எந்த அழுத்தமும் இல்லை.


பொதுஜன பெரமுனவின் நம்பிக்கையை வென்ற சிறந்த அரசியல்வாதி என்றபடியால் தான் தினேஷ் குணவர்த்தனவை இந்த அரசாங்கம் பிரதமராக நியமித்தது.


இருப்பினும் பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்ச பொறுப்பேற்கவுள்ளார் என்பது ஒரு வதந்தி என்று நான் நினைக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.