Header Ads



அமைச்சுப் பதவிகள் தாமதமானால், அரசுக்கு ஆதரவளிப்பது தொடர்பில் ஆலோசனை


நீண்ட காலமாக அமைச்சுப் பதவிகளுக்காகக் காத்திருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் குழு தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.


இவர்களுக்கான அமைச்சுப் பதவிகள் தாமதமானால், அரசுக்கு ஆதரவளிப்பது தொடர்பில் முடிவெடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.


இது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


தற்போதைய ஜனாதிபதியின் நியமனத்தின் பின்னர் புதிய அமைச்சரவை அமைச்சர்கள் பல தடவைகள் நியமிக்கப்பட்டும் இதுவரையில் எந்த அமைச்சுப் பதவியும் வழங்கப்படவில்லை என  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் குழு கவலை தெரிவிக்கின்றனர்.


பொதுஜன பெரமுன தரப்பும் அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளவர்களின் பெயர்களை குறிப்பிட்டு சில மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன. 


No comments

Powered by Blogger.