Header Ads



பணம் கொடுக்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம்


உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதியை வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


நிதி அமைச்சர் என்ற வகையில் இது தொடர்பான கடிதம் ஜனாதிபதிக்கு அண்மையில் அனுப்பி வைக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


தேர்தலுக்கு பணம் வழங்குமாறு நிதி அமைச்சின் செயலாளருக்கு ஆணைக்குழு அனுப்பிய கடிதத்தை, நிதி அமைச்சரின் ஒப்புதலுக்காக அமைச்சின் செயலாளர் நிதி அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குத் தேவையான பணத்தை விடுவிப்பதற்கும் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியின் அங்கீகாரம் தேவை என நிதி அமைச்சின் செயலாளர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.