Header Ads



முழு நாட்டையும் சோகத்தில் மூழ்கடித்த, ஒரு குடும்பமே பறிபோனவர்களின் இறுதிச்சடங்குகள் (படங்கள் இணைப்பு)


வவுனியா - குட்செட் வீதியியை சேர்ந்த நான்கு பேர் கொண்ட குடும்பத்தினர் அண்மையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தனர்.


அவர்களது இறுதிச்சடங்குகள் பலரது கண்ணீருக்கு மத்தியில் இன்று (10.03.2023) இடம்பெற்றுள்ளது.


குறித்த சம்பவத்தில் குடும்பத்தலைவர் தூக்கில் தொங்கிய நிலையிலும் ஏனையவர்கள் படுக்கையில் உறங்கிய படியும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.


இந்த சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.


உடற்கூற்று பரிசோதனையின் முடிவுகள் முழுமையாக வெளியாகாத நிலையில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இன்று (10.03.2023) வெளிக்குளம் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





No comments

Powered by Blogger.