Header Ads



கையெழுத்து போடுவாரா ரணில்..?


உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான நிதிக் கோரிக்கை கடிதம் , நிதி அமைச்சரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டதாக நிதி அமைச்சின் செயலாளர் , தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார். 


உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு நிதி கோரி தேர்தல்கள் ஆணைக்குழு , கடந்த மார்ச் மாதம் 7 ஆம் திகதி நிதிச் செயலாளருக்கு அனுப்பிய கடிதத்துக்குப் பதிலளிக்கும் வகையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது . முன்னதாக நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு நிதி வழங்குவதற்கு நிதி செயலாளரின் அனுமதியே போதுமானது என நிதிச் செயலாளர் தமக்கு அறிவித்திருந்தாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா சுட்டிக்காட்டியுள்ளார் . 


எவ்வாறாயினும் , தேவையான நிதி , உரிய காலத்தில் வழங்கப்படும் என நம்புவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார் . 


உள்ளூராட்சி தேர்தல் 2023 க்காக 2023 வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட எந்தவொரு நிதியையும் தடுத்து நிறுத்துவதைத் தடுக்கும் வகையில் இலங்கையின் உயர் நீதிமன்றம் மார்ச் 3 ஆம் திகதி நாட்டின் நிதிச் செயலாளர் மற்றும் நிதி அமைச்சரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டமா அதிபர் ஆகியோருக்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்த நிலையிலேயே தற்போதைய கடிதப்பரிமாறல்கள் இடம்பெறுகின்றன . 


ஏற்கனவே 203 , மார்ச் 9 இல் திட்டமிடப்பட்ட உள்ளூராட்சித் தேர்தல் நிதிப் பற்றாக்குறையால் , ஏப்ரல் 25 மாற்றப்பட்டுள்ளது .

No comments

Powered by Blogger.