Header Ads



சந்திரிக்காவுக்கு 5 மில்லியன் டொலர்களை இலஞ்சமாக வழங்க முயற்சி


தான் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் ஹோங்கொங் நாட்டை சேர்ந்த வர்த்தகர், இலங்கையை சேர்ந்த ஒருவருடன் நாடாளுமன்றதில் உள்ள தனது அலுவலகத்தில் வந்து 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாக வழங்க முயற்சித்ததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.


அவர் மேலும் தெரிவிக்கையில், 


இலங்கையில் தாங்கள் மேற்கொள்ளும் கொள்ளையடிப்புகளை சுதந்திரமாக முன்னெடுத்து செல்ல இந்த இலஞ்சத்தை அவர்கள் வழங்க முயற்சித்தனர்.


அத்துடன் நாடாளுமன்றத்தில் உள்ள எனது அலுவலகத்தில் இருக்கும் மேசையில் இந்தப் பணத்தை வைத்தனர். பொலிஸாரை அழைப்பதற்கு முன் பணத்தை எடுத்துச் செல்லுமாறு நான் கூறினேன் என குறிப்பிட்டுள்ளார். Twin

No comments

Powered by Blogger.