Header Ads



2 அமைச்சர்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்


குருநாகல், பமுனகொடுவ பிரதேசத்தில் கலாசார நிலையமொன்றை திறந்து வைப்பதற்காக சென்ற அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சர் ஒருவரை அப்பகுதி மக்கள் சிலர் கேலி கிண்டல் செய்துள்ளனர்.


அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மற்றும் இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத் ஆகியோர் பமுனகொடுவ பிரதேசத்தில் கலாசார நிலையமொன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டனர். இவர்களுக்கு அங்கிருந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தும் கேலி கிண்டல் செய்தும் அவமானப்படுத்தினான்.


எனினும் எதிர்ப்பையும் மீறி அமைச்சர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அந்த இடத்தில் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பை பலப்படுத்தினர்.


இந்த கலாசார நிலையத்தை பல அமைச்சர்கள் பல தடவைகள் திறந்து வைத்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

No comments

Powered by Blogger.