Header Ads



2 முட்டைகளை விற்றவருக்கு, ஒரு இலட்சம் ரூபா அபராதம்


ஹட்டன் நகரில் கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக முட்டைகளை விற்பனை செய்த கடைக்காரர் ஒருவருக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


சந்தேக நபர் கடந்த 7ஆம் திகதி நுகர்வோர் சேவை அதிகாரசபையினரால் கைது செய்யப்பட்டு இன்று (10) ஹட்டன் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.


அங்கு அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், சந்தேக நபருக்கு மாவட்ட நீதிபதி பாரூக் டீன் ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதித்தார்.


சிவப்பு முட்டை ஒன்றை 52 ரூபாவுக்கும் வெள்ளை நிற முட்டையை 56 ரூபாவுக்கும் விற்பனை செய்யும் போது கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.