Header Ads



இப்படியும் கொள்ளையடிக்கிறார்கள் - 2 பேரிடமிருந்து 90 கைத்தொலைபேசிகள் மீட்பு


பொலிஸ் உத்தியோகத்தர்கள் போன்று வேடமணிந்து மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களை அச்சுறுத்தி 90 கைத்தொலைபேசிகள் மற்றும் மடிக்கணினிகளை அபகரித்த இருவரை கொழும்பு வடக்குப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.


சந்தேகநபர்கள் இந்த பொருட்களை பல இடங்களில் மக்களுக்கு விற்பனை செய்ததை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.


இவ்விரு சந்தேக நபர்களும் மோட்டார் சைக்கிளில் சென்று பல்வேறு நபர்களை சோதனையிட்டு கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட உடமைகளை திருடிச் செல்வதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் தெரிவித்தனர்.


அவர்கள் கொள்ளையடித்த 37 ஆப்பிள் ஐபோன் ரக செல்போன்கள், 44 ஸ்மார்ட் ரக செல்போன்கள், 5 லேப்டாப்கள், 2 டேப் கம்ப்யூட்டர்களை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.