Header Ads



ரணிலிடமிருந்து ஆட்சி கைப்பற்றப்படும் - மரிக்கார் Mp

தேர்தலை நடத்துவதா இல்லையா? அதற்கு நிதியை வழங்குவதா இல்லையா என்பதை தீர்மானிக்கும் உரிமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கிடையாது. 


தேர்தலைக் காலம் தாழ்த்துவதற்காக அவர் தற்போது முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு எதிர்காலத்தில் நிச்சயம் பொறுப்பு கூற வேண்டியேற்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.


அதே போன்று விரைவில் மீண்டுமொரு புரட்சி ஏற்பட்டு அதன் மூலம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை போன்றே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்தும் ஆட்சி கைப்பற்றப்படும் என்றும் எஸ்.எம்.மரிக்கார் குறிப்பிட்டார்.



No comments

Powered by Blogger.