Header Ads



இலங்கை முஸ்­லிம்­களின் உணர்­வு­க­ளை, ஈரான் தூதரகம் மறந்து விட்டதா..?


(றிப்தி அலி)

ஈரானின் தேசிய தினம் மற்றும் இஸ்­லா­மிய மறு­ம­லர்ச்சி வெற்­றியின் 44ஆவது பூர்த்தி நிகழ்வு ஆகி­யன கடந்த வெள்­ளிக்­கி­ழமை கொழும்­பி­லுள்ள இலங்­கைக்­கான ஈரான் தூது­வரின் உத்­தி­யோ­க­பூர்வ வாசஸ்­த­லத்தில் இடம்­பெற்­றது.


இந்த நிகழ்­விற்­கான பிர­தம அதி­தி­யாக சுற்­றாடல் அமைச்சர் நசீர் அஹமத் வெளி­நாட்டு அமைச்­சினால் தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருந்தார். இதற்­க­மைய, பிரத அதிதி பி.ப 7.00 மணிக்கே வருகை வந்­து­விட்டார். இது போன்று, அழைப்பு விடுக்­கப்­பட்ட விருந்­தி­னர்­களும் வருகை தந்­தி­ருந்த நிலையில், பி.ப. 7.40 மணி­யா­கியும் இந்த நிகழ்வு ஆரம்­பிக்­கப்­ப­ட­வில்லை.


இது தொடர்பில் அங்கு வருகை தந்­தி­ருந்த அமைச்சர் நசீர் அஹ­மதின் இணைப்புச் செய­லா­ள­ரொ­ரு­வரிடம் வினவியபோது, “முன்னாள் ஜனா­தி­பதி முன்னாள் ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­பக்ஷ வந்­த­வு­ட­னேயே நிகழ்வு ஆரம்­ப­மாகும்” என அவர் பதி­ல­ளித்தார்.

இவ்­வா­றான நிலையில், பி.ப 7.47 மணி­ய­ளவில் முன்னாள் ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­பக்ஷ வந்­த­வுடன் நிகழ்வு ஆரம்­ப­மா­கி­யது. நிகழ்வு ஆரம்­ப­மாகி சுமார் 15 நிமி­டங்கள் கழிந்த பின்­னரே ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் தலை­வரும் முன்னாள் ஜனா­தி­ப­தி­யு­மான மஹிந்த ராஜ­பக்ஷ அங்கு வருகை தந்தார்.


முஸ்லிம் நாடு­களின் நண்பன் என அழைக்­கப்­படும் மஹிந்த ராஜ­ப­க்ஷ­விற்கு முக்­கி­யத்­துவம் வழங்­காது, கோட்­டா­பய ராஜ­ப­க்ஷ­விற்கு ஈரான் முக்­கி­யத்­துவம் வழங்­கி­யமை இந்­நி­கழ்வில் கலந்­து­ கொண்­ட­வர்கள் மத்­தியில் பேசு­பொ­ரு­ளாகக் காணப்­பட்­டது.

பல­வந்­த­மாக முஸ்­லிம்­களின் ஜனாஸா எரிக்­கப்­பட்­டதை நிறுத்­து­மாறு ஈரான் உட்­பட அனைத்து முஸ்லிம் நாடு­க­ளி­னாலும் முன்னாள் ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­ப­க்ஷ­விடம் முன்­வைக்­கப்­பட்ட கோரிக்கை அச்சந்தர்ப்பத்தில் நிரா­கரிக்கப்­பட்­டது.


இவ்­வா­றான இரா­ஜ ­தந்­திர விட­யங்­க­ளையும், இலங்கை முஸ்­லிம்­களின் உணர்­வு­க­ளையும் கொழும்பிலுள்ள ஈரான் தூதுவராலயம் மறந்த நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு இந்த நிகழ்வில் ஈரான் பாரிய முக்கியத்துவம் வழங்கியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.-Vidivelli

No comments

Powered by Blogger.