Header Ads



முஸ்லிம்கள் மீது, வியாழேந்திரனுக்கு என்ன பிரச்சினை..?


(எம்.எஸ்.எம்.நூர்தீன்)


இரா­ஜாங்க அமைச்சர் வியா­ழேந்­திரன் காத்­தான்­குடி முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ராக தெரி­வித்த கருத்தை காத்­தான்­குடி பள்­ளி­வா­சல்கள் முஸ்லிம் நிறு­வ­னங்­களின் சம்­மே­ளன கண்­டித்­துள்­ளது.


இது தொடர்­பாக சம்­மே­ளனம் விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,


நமது நாட்டில் கடந்த மூன்று தசாப்­தங்­க­ளுக்கு மேலாக இடம்­பெற்ற யுத்தம் கார­ண­மாக வடக்­கிலும் கிழக்­கிலும் வாழ்ந்த முஸ்­லிம்கள் பல்­வேறு வகை­யான துன்­பங்­க­ளையும் இன்­னல்­க­ளையும் அனு­ப­வித்­த­மையை இலங்கை வாழ் மக்கள் அனை­வரும் அறி­வார்கள்.


யுத்­தத்­தினால் மிகக் கடு­மை­யாக பாதிக்­கப்­பட்ட முஸ்­லிம்­க­ளது இழப்­பு­களை அறிந்தும் அதனை வேண்­டு­மென்றே மறைத்தும் இன­வாத குழுக்­களின் பின்னால் மறைந்து கொண்டு தனது தேர்தல் பிரச்­சா­ரத்தை ஆரம்­பித்­தி­ருக்­கிறார்.


அநி­யாயம் இழைக்­கப்­பட்ட ஒரு சமூ­கத்தின் பின்னால் இருக்­கின்ற வேத­னை­க­ளையும் வலி­க­ளையும் புரிந்து கொள்­கின்ற மனோ­நி­லையில் வியா­ழேந்திரன் இல்லை என்­பதும் இன்னும் ஒரு மன வேத­னை­யான விட­ய­மாகும். வள­மான நமது தேசம் இவரைப் போன்ற விஷமப் பிரச்­சா­ரத்­தி­னால்தான் சீர­ழிந்து போயி­ருக்­கி­றது என்­பதே உண்­மை­யாகும்.


கடந்த வரு­டங்­களில் நிய­மிக்­கப்­பட்ட ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுக்கள் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு பாரி­ய­ளவில் காணிப் பிரச்­சினை இருக்­கி­றது என்­பதை ஏற்றுக் கோண்­டி­ருக்­கின்ற அதே நேரம் அவை­களைக் தீர்ப்­ப­தற்­கான முயற்­சிகள் எடுக்­கப்­பட்டும் சில அரச அதி­கா­ரி­களின் கரி­ச­னை­யின்­மை­யினால் அவை இன்னும் தீர்க்­கப்­ப­ட­வில்லை என்­ப­துதான் யதார்த்தம்.


உதா­ர­ண­மாக மண்­முனைப் பற்று பிர­தே­சத்தில் முஸ்­லிம்கள் பரம்­ப­ரை­யாக வாழ்ந்த அவர்­க­ளுக்கு சொந்­த­மான 48 ஏக்கர் காணி இது­வ­ரையில் அவர்­க­ளுக்கு விடு­வித்துக் கொடுக்கப் பட­வில்லை என்­ப­தையும் வியா­ழேந்­திரன் தெரிந்து கொள்ள வேண்டும்.


இவ்­வ­ளவு காலமும் இன­வாத அர­சு­க­ளோடு ஒட்டி உற­வாடி இருந்­து­விட்டு இப்­போது மக்கள் அவ் இன­வாத ஆட்­சி­யா­ளர்­களை வீட்­டுக்கு அனுப்ப இருக்­கின்ற நிலையில் தனக்கு மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் அர­சியல் அதி­காரம் ஒன்று இல்­லாமல் போகும் என்ற அச்சம் அவ­ருக்கு பீடித்­­தி­ருக்­கி­றது. இது­போன்ற இனங்­க­ளுக்­கி­டையில் குரோ­தத்தை தோற்­று­விக்­கின்ற கருத்­துக்­களை பொது­வெ­ளியில் தெரி­விப்­பதை வியா­ழேந்­திரன் முற்­றாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று நாம் கேட்­டுக்­கொள்­கின்றோம்.


இரண்­டா­வ­தாக, ஈஸ்டர் தாக்­கு­தலின் பின்­ன­ணியில் இருந்து யார் செயற்­பட்­டார்கள் என்­பது மிகத் தெளி­வாக தற்­போது வெளி­வந்­தி­ருக்­கின்ற நிலையில் வெறு­மனே சஹ்­ரா­னோடு தொடர்­பில்­லாத ஒரு பள்ளிவாசலை அரசாங்கம் தனது தேவைக்காக பயன்படுத்துவதற்கு முயற்சிக்கின்ற நிலையில் அதனை காத்தான்குடி சமூகம் மீண்டும் எங்களுக்குத் தர வேண்டும் என்று கேட்பதில் வியாழேந்திரனுக்கு என்ன பிரச்சினை இருக்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறோம்.- Vidivelli

1 comment:

  1. ஓட்டு கிடைக்க தன்னுடைய மனைவியையே கூட்டி கொடுத்த தமிழ் இன வெறியன் இவன். கடந்த முறை ஹிஸ்புல்லாஹ்வின் வெற்றியை பரித்தே பாராளுமன்றம் சென்றான் இம்முறை வெற்றியேன்பது நடக்காது என்று தெரிந்தே தாயை புணரும் காரியங்களுக்கு நிகரானதை செய்து வெல்ல துடிக்கின்றான்

    ReplyDelete

Powered by Blogger.