Header Ads



மனைவியுடன் மியன்மார் பயணமானார் கோட்டாபய


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று நள்ளிரவு நாட்டை விட்டு வெளியேறியதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.


மேலும், முன்னாள் ஜனாதிபதி மியன்மாருக்கு 10 நாள் தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை சென்றுள்ளதாக ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


மியன்மாரில் உள்ள பல சமூக ஆர்வலர் அமைப்புகளின் அழைப்பின் பேரில் அவர் அங்கு செல்வதாகவும் , முன்னாள் ஜனாதிபதியின் மனைவி அயோமா ராஜபக்ஷ, பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார ஆகியோரும் இந்த விஜயத்தில் இணைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் சட்டத்தரணி ஜே.எம். ஜனக பிரியந்த பண்டார முன்னாள் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவின் சகோதரராவார்.

No comments

Powered by Blogger.