Header Ads



நாம் வெற்றி பெறுவோம்


 உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடக்குமா அல்லது இல்லையா என்பது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவிடமே கேட்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் இந்த விடயத்தை கூறியுள்ளார்.


மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது எங்களது கட்சியின் வேலை இல்லை. அது தேர்தல் ஆணைக்குழுவின் வேலை.


இதனால் இது தொடர்பில் எம்மால் எதுவும் சொல்ல முடியாது. தேர்தல் நடக்குமா அல்லது இல்லையா என்பது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவிடமே கேட்க வேண்டும்.


இந்தத் தேர்தலில் யாரும் எமக்குச் சவால் அல்ல. நாம் வெற்றி பெறுவோம். 50 வீதத்துக்கும் அதிகமான தொகுதிகளைக் கைப்பற்றுவோம் என தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. இவனுடைய பேச்சை நுணுக்கமாகப் பாருங்கள். தேர்தலை ஒத்திவைக்க வேண்டும். அதற்குள்ள சகல தந்திரங்களையும் செய்து தலைமைக்கு கட்டளையிட்டு விட்டு தந்திரம் நிறைவேறிவிட்டது உறுதிப்படுத்தப்பட்டபின்னர் பொதுமக்களை நோக்கி என்ன சொல்கின்றான். தேர்தலை நடாத்துவது தேர்தல் ஆணையாளரின் பணி, தேர்தல் பற்றி வேண்டுமென்றால் அவரிடம் கேளுங்கள். எங்களுக்குத் தெரியாது. இந்த மூதேவிக்கு எதிராக சட்ட நடவடிக்ைக எடுக்க இந்த நாட்டில் யாருமில்லையா. கேவலத்துக்கு மேல் கேவலம்.

    ReplyDelete

Powered by Blogger.