Header Ads



சிறைச்சாலைக்குள் என்னை கொலை செய்ய திட்டம் - முதலிகே


சிறைச்சாலையில் இருந்த தம்மை கொலை செய்ய திட்டமிடப்பட்டதாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார் . 


இன்று -02- இடம்பெற்ற விசேட செய்தியாளர்கள் சந்திப்பலி கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார் . 


தாம் கைது செய்யப்பட்டு பேலியகொடை காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக வசந்த முதலிகே தெரிவித்தார் .


 இதனையடுத்து , அங்கிருந்து எடெரமுல்ல காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் , இதன்போது காவல்நிலையத்தில் யாரும் இருக்கவில்லை எனவும் வசந்த முதலிகே குறிப்பிட்டார் . 


விஜேவீரவுக்கு நடந்தது ஞாபகம் இருக்கிறதா என கேள்வி எழுப்பிய சில காவல்துறையினர் , தமக்கு பல்வேறு இன்னல்களை கொடுத்ததாக தெரிவித்தார் . 


பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 167 நாட்களாக சிறையில் வைக்கப்பட்டிருந்த வசந்த முதலிகே நேற்றைய தினம் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்

No comments

Powered by Blogger.