Header Ads



அதானியின் சாம்ராஜ்யத்தை ஆட்டி, வாழ்க்கையையே புரட்டிப்போட்ட ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் கதை


24 ஜனவரி 2023. இந்தியாவின் முன்னணித் தொழிலதிபர் கௌதம் அதானியின் வாழ்க்கையையே புரட்டிப்போட்ட நாள் இது. அன்றுதான் அமெரிக்காவின் நிதி ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அறிக்கை வெளிவந்தது.


இந்த அறிக்கையில், அதானி குழுமம் மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த அறிக்கையில் அதானி குழுமத்தின் முன் 88 கேள்விகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த அறிக்கையை அதானி குழுமம் நிராகரித்துள்ளது.


இந்த அறிக்கை வெளிவந்ததில் இருந்து பங்குச்சந்தையில் அதானி குழுமப் பங்குகள் விலை சரியத் தொடங்கியது. சில நாட்களுக்கு முன்பு வரை உலகின் மூன்றாவது பெரிய பணக்காரராக இருந்தவர் கெளதம் அதானி.


ஆனால், ஹிண்டன்பர்க் அறிக்கை வந்த 10 நாட்களுக்குள், முதல் 20 பணக்காரர்கள் பட்டியலில் கூட இவர் பெயர் இல்லை. இது தவிர ரூ.20,000 கோடி மதிப்பிலான எஃப்பிஓ பங்கு வெளியீட்டையும் கெளதம் அதானி ரத்து செய்தார். நிறுவனம் பெரும் நஷ்டத்தில் உள்ளது.


இத்தகைய சூழ்நிலையில், இந்த அறிக்கையை வெளியிட்ட ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனத்தின் கதை என்ன? ஹிண்டன்பர்க் ஆராய்ச்சியின் பின்னணியில் உள்ளவர் யார்? இந்தக் கேள்விகளுக்கான விடைகளைத் தேடலாம்.


1937 ஆம் ஆண்டு - ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சி செய்து கொண்டிருந்தார். அந்தக் காலத்தில் ஹிண்டன்பர்க் என்ற ஒரு விண்கலம் இருந்தது.


விண்கலத்தின் பின்புறம் நாஜி சகாப்தத்தை குறிக்கும் ஒரு ஸ்வஸ்திகா சின்னம் பொறிக்கப்பட்டது. அமெரிக்காவின் நியூஜெர்சியில், பூமியிலிருந்து இந்த விண்கலத்தை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அப்போதுதான் அசாதாரணமான காட்சி ஒன்றைக் கண்டனர்.


ஒரு பெரும் வெடி சத்தத்துடன் வானத்தில் ஹிண்டன்பர்க் விண்கலம் தீப்பிடித்தது. மக்களின் அலறல் சத்தம் கேட்டது. விண்கலம் தரையில் விழுந்தது. 30 வினாடிகளுக்குள் பெரும் அழிவு.


உள்ளூர் மக்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். சிலர் காப்பாற்றப்பட்டனர். சிலர் உயிரிழந்தனர்.


எரியும் விண்கலத்தின் புகை வானத்தை சூழ்ந்து, பகலில் இரவை உருவாக்கியது. இப்போது எஞ்சியிருப்பது விண்கலத்தின் எச்சங்கள் மட்டுமே.


இந்த விண்கலத்தில் 16 ஹைட்ரஜன் வாயு பலூன்கள் இருந்தன. விண்கலத்தில் ஏறக்குறைய 100 பேர் கட்டாயமாக உட்கார வைக்கப்பட்டனர். இந்த விபத்தில் 35 பேர் உயிரிழந்தனர்.


இதற்கு முன்பும் ஹைட்ரஜன் பலூன்களால் விபத்துகள் நடந்துள்ளன என்றும், அவற்றிலிருந்து பாடம் கற்றிருந்தால், இந்த விபத்தைத் தவிர்த்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.


கௌதம் அதானி குறித்த அறிக்கையை வெளியிட்ட ஹிண்டன்பர்க் என்ற ஆராய்ச்சி நிறுவனத்தின் பெயரும் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையது தான்.


“ஹிண்டன்பர்க் சம்பவத்தின் அடிப்படையில், பங்குச் சந்தையில் ஏற்படும் முறிவுகள் மற்றும் இடையூறுகளை நாங்கள் கண்காணிக்கிறோம். அவற்றை அம்பலப்படுத்தி உண்மையை வெளிக்கொணர்வதே எங்களின் நோக்கம்.


ஹிண்டன்பர்க் விபத்தில் மக்கள் பாதிக்கப்பட்டதால், இது போன்ற நிதி விபத்துகள் அல்லது பங்குச் சந்தையில் ஏற்படும் ஆபத்துகள் ஆகியவற்றில் இருந்து மக்களைக் காக்கச் செயல்படுகிறோம்” என்று ஹிண்டன்பர்க் நிறுவனம் கூறுகிறது.


அதானி மீதான அறிக்கை போன்ற ஓர் அறிக்கை ஹிண்டன்பர்க் நிறுவனத்தால் எப்படித் தயார் செய்யப்படுகிறது? இது குறித்த தகவல்கள் நிறுவனத்தின் இணையதளத்தில் உள்ளன. தனது முறைகளை இந்நிறுவனம் பின்வருமாறு விளக்குகிறது:


தனக்குப் பல தசாப்தங்களாக முதலீட்டு அனுபவம் இருப்பதாக ஹிண்டன்பர்க் கூறுகிறது.


ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம், அதன் அறிக்கைகள் மற்றும் பிற வகை நடவடிக்கைகளின் மூலம் முன்னரும் பல நிறுவனங்களின் பங்கு விலைகளை விழச் செய்ததாகத் தனது இணையதளத்தில் கூறுகிறது.


அதானிக்கு முன், ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்ட பெரிய நிறுவனம் டிரக் நிறுவனமான நிகோலா. இந்த விவகாரம் நீதிமன்றத்தை அடைந்தபோது, நிகோலா நிறுவனத்தின் நிறுவனர் குற்றவாளி என தீர்ப்பானது.


ஹிண்டன்பர்க், 2020 ஆம் ஆண்டு முதல் 30 நிறுவனங்களின் ஆய்வு அறிக்கைகளை அம்பலப்படுத்தியுள்ளது என்றும் அறிக்கை வெளியான அடுத்த நாளிலேயே அந்த நிறுவனங்களின் பங்குகள் சராசரியாக 15% சரிந்தன என்றும் ப்ளூம்பெர்க் அறிக்கை கூறுகிறது.


அடுத்த ஆறு மாதங்களில் இந்த நிறுவனங்களின் பங்குகள் சராசரியாக 26 சதவீதத்துக்கும் மேல் சரிவைப் பதிவு செய்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


ஹிண்டன்பர்க் தனது இணையதளத்தில் செப்டம்பர் 2020 முதலான தனது அறிக்கைகளின் பட்டியலையும் வழங்கியுள்ளது.


ஹிண்டன்பர்க் எந்தெந்த சந்தர்ப்பங்களில் ஒரு நிறுவனத்தைப் பற்றி விசாரிக்கிறது:


ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் நேதன் எனப்படும் நெட் ஆண்டர்சன் ஆவார்.


ஆண்டர்சன் இந்த நிறுவனத்தை 2017 இல் நிறுவினார். அவர், அமெரிக்காவின் கனெக்டிகட் பல்கலைக்கழகத்தில் படித்தவர்.


ஆண்டர்சன் சர்வதேச வணிகம் பயின்று, ஃபேக்ட்-செட் ரிசர்ச் சிஸ்டம்ஸ் என்ற தரவு நிறுவனத்தில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இந்த நிறுவனத்தில், ஆண்டர்சன் முதலீட்டு மேலாண்மை நிறுவனங்களுடன் பணிபுரிந்தார்.


2020 ஆம் ஆண்டில் வால் ஸ்ட்ரீட் ஜர்னலுக்கு அளித்த பேட்டியில், ஆண்டர்சன், "இவர்கள் மேலோட்டமான பகுப்பாய்வு செய்கிறார்கள் என்பதை நான் உணர்ந்தேன்." என்றார்.


ஆண்டர்சன் இஸ்ரேலில் சிறிது காலம் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக இருந்ததாக, செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் தெரிவிக்கிறது.


ஆண்டர்சனின் லிங்க்ட்இன் சுயவிவரத்தில், "ஆம்புலன்ஸ் டிரைவராகப் பணிபுரியும் போது, மிகுந்த அழுத்தத்தில் எப்படி வேலை செய்வது என்று கற்றுக்கொண்டேன்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


அதே சுயவிவரத்தில் அவருக்கு 400 மணிநேர மருத்துவ அனுபவம் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


பல நேர்காணல்களில், ஆண்டர்சன் அமெரிக்க கணக்காளர் ஹாரி மோர்கோபௌலோஸை தனது முன்மாதிரியாகக் குறிப்பிடுகிறார்.


ஆண்டர்சனின் முன்மாதிரியான ஹாரி 2008 பெர்னார்ட் மடோஃப் போன்சி திட்டத்தின் ஊழலைப் பற்றி மக்களிடம் வெளிச்சம் போட்டுக் காட்டினார்.


சமீபத்தில், நெட்ஃபிளிக்ஸில் த மான்ஸ்டர் ஆஃப் வால் ஸ்ட்ரீட் என்ற தொடர் வெளியானது. இது இவரைப் பற்றிய கதை தான்.


ஆனால் தற்சமயம் இவரது சீடர் நெட் ஆண்டர்சனால், பங்குச் சந்தையில் சலசலப்பு ஏற்பட்டு, அது நேரடியாக கௌதம் அதானியை பாதிக்கிறது.


(எழுத்து - விகாஸ் த்ரிவேதி)

1 comment:

  1. Interesting article. I am not sure if this is the first time an Indian Company got caught by short sellers. The reason they exist is because of the "cooked books" by Directors of these companies. Adani can bring up any argument without merit and will certainly fail because these short sellers did their homework before accusing any company of cooking their books. They are not scared of lawsuits. Another company that specializes in similar Chinese companies is called Muddy Waters.

    ReplyDelete

Powered by Blogger.