Header Ads



புதிய பணிப்பாளருக்கு சர்வ மதத் தலைவர்கள் வாழ்த்து


முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின்  புதிய பணிப்பாளராக பதவியேற்ற  செய்னுல் ஆப்தீன் முஹம்மத் பைஸல் அவர்களை இன்று (06/02/2023) உத்தியோக பூர்வமாக சர்வ மதத் தலைவர்கள் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்து, பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.

இந்நிகழ்வில் சர்வ மதத் தலைவர்களான சாஸ்த்ரபதி கலாநிதி கலகம தம்மரன்சி நாயக தேரர், சிவ ஸ்ரீ கலாநிதி பாபு சர்மா குருக்கள், அல்-ஹாஜ் அஷ்-ஸெய்யத் கலாநிதி ஹஸன் மௌலனா அல்-காதிரி மற்றும் கௌரவ பாதிரியார் கலாநிதி நிஷான் குரே ஆகியோர் கலந்துக்கொண்டனர்.


இலங்கை நிருவாக சேவையின் முதல்தர அதிகாரியான இவர் இலங்கை நிருவாக சேவையில் 19 வருடத்திற்கு மேலான அனுபவத்தையும் கொண்டவர். இவர் கேகாலை மாவட்ட ருவன்வெல்ல மற்றும் கலிகமுவ பிரதேச செயலகங்களில் உதவி பிரதேச செயலாளராகவும், கேகாலை மாவட்ட கமநல சேவைத் திணைக்களத்தின் உதவி ஆணையாளராகவும், கமநல சேவைத் திணைக்களத்தின் பிரதான காரியாலயத்தின் ஆணையாளராகவும் (அபிவிருத்தி), அரநாயக்க பிரதேச செயலாளராகவும் உயர் பதவிகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிகழ்வில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர்களான திரு. அன்வர் அலி, அலா அஹமட், கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர்  எம்.எம்.எம்.முப்தி உள்ளிட்ட திணைக்கள அலுவலர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

No comments

Powered by Blogger.