Header Ads



இலங்கைப் பெண், துருக்கியில் சடலமாக மீட்பு


நிலநடுக்கத்தைத் தொடர்ந்து துருக்கியில் காணாமல் போன இலங்கைப் பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக துருக்கியிலுள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது . 


குறித்த பெண்ணின் சடலம் அவரது மகளால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது .


 கண்டி - கலகெதரவில் இருந்து 20 வருடங்களுக்கு முன்னர் துருக்கிக்கு சென்ற , 69 வயதுடைய இலங்கைப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்தார் . 


கடந்த 6 ஆம் திகதி துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தையடுத்து , அங்கு வசித்துவந்த 15 இலங்கையர்களும் பாதிப்புகள் இன்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டனர் . 


எவ்வாறாயினும் , துருக்கியில் வசித்துவந்த பெண்ணொருவர் , நிலநடுக்கத்தின் பின்னர் காணாமல்போயிருந்த நிலையில் அவரை தேடி தொடர்ந்து தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தன .

No comments

Powered by Blogger.