Header Ads



சுதந்திர தினத்தைக் கொண்டாட வேண்டுமா..?


வயிற்றுக்கு உணவில்லாதபோது பாரிய நிதியை செலவிட்டு சுதந்திரத்தினத்தைக் கொண்டாட வேண்டுமா? எனக் கேள்வி எழுப்பியுள்ள ஓமல்பே சோபித தேரர், சுதந்திரத் தினக் கொண்டாட்டங்களை நிறுத்த வேண்டும் எனவும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


சுதந்திரத் தினக் கொண்டாட்டங்கள் தொடர்பில் பிரதமர் தினேஸ் குணவர்தனவை சந்தித்தப் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


இதன்போது ​தொடர்ந்து உரையாற்றிய அவர், என்னிடம் உடையில்லை என்பதற்காக வேறொருவரின் உடையை அணிந்துகொள்ள முடியுமா? எமது நாட்டு மக்களுக்கு உணவில்லை, வைத்தியசாலையில் மருந்துகள் இல்லை, கல்விக்கு தேவையான வளங்கள் இல்லை, உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்குக் கூட மின்சாரத்தை வழங்க முடியாத நிலையில் நாம் இருக்கிறோம். இதனை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். நாடு வங்குரோத்தடைந்துள்ளது எனவும் தெரிவித்தார்.


இவ்வாறான நிலையில் அதிகளவான பணத்தை செலவிட்டு சுதந்திரத் தினத்தைக் கொண்டாட வேண்டுமா? இதற்குப் பதிலாக நாட்டுக்கு தேவையான மருந்து பொருள்களைக் கொண்டுவாருங்கள், மக்களுக்கு உணவளியுங்கள், மாணவர்களுக்கு மின்சாரத்தை வழங்குங்கள் எனவும் தெரிவித்தார்.


No comments

Powered by Blogger.