Header Ads



யாழ்ப்பாணத்தில் பதற்றத்திடையே கஜேந்திரன் உள்ளிட்ட 7 பேர் கைது


- நிதர்ஷன் வினோத் -


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்கேற்புடன் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உட்பட ஏழு பேர் வரை சற்று முன்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை பகிஷ்கரிப்பதற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் கைதுசெய்யப்பட்டதுடன், யாழ்ப்பாண மத்திய பஸ் நிலையத்துக்கு முன்பாக பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.


பாராளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.