Header Ads



துருக்கி - சிரியா நிலநடுக்கத்தில் 50,000 பேர் உயிரிழந்திருக்கலாம் - 26 மில்லியன் மக்கள் பாதிப்பு - ஐ.நா.


துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நில அதிர்வுகள் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை அண்மித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது . 


சபையின் நிவாரண இயக்குனர் மாட்டின் கிரிபின்ஸ் தெற்கு துருக்கிக்கான விஜயத்தின் பின்னர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார் . 


அவர் நேற்றையதினம் நில அதிர்வு கேந்திர ஸ்தானமான கஹரஸ்மன்மராஸ் பகுதிக்கு சென்றிருந்தார் . இன்னும் எத்தனை பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர் என்பதை துல்லியமாக கூற முடியாது என நிவாரண இயக்குனர் தெரிவித்தார் . 


நிலநடுக்கத்தால் 26 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் . துருக்கி மற்றும் சிரியா முழுவதும் குறைந்தது 870,000 பேருக்கு உணவுத் தேவைப்பாடு உள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது . 


சிரியாவில் மட்டும் 5.3 மில்லியன் மக்கள் வீடுகளை இழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் , உடனடி சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 42.8 மில்லியன் டொலர் நிதியை வழங்குமாறு உலக சுகாதார அமைப்பு உலகெங்கிலும் உள்ள நிறுவனங்களைக் கோரியுள்ளது . 


துருக்கியில் மட்டும் மீட்புப் பணிகளில் வெளிநாடுகளைச் சேர்ந்த 8,294 பேரும் , பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 32,000 - க்கும் மேற்பட்டோரும் பங்கேற்று வருவதாகக் கூறப்படுகிறது . 


இதற்கிடையில் , தெற்கு துருக்கியின் ஹார்டே பகுதியில் அடையாளம் தெரியாத பல குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஜேர்மன் மற்றும் ஆஸ்திரிய படைகள் தேடுதல் நடவடிக்கைகளை நிறுத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் முன்னர் தெரிவித்திருந்தன .

No comments

Powered by Blogger.